- Home
- Sports
- Sports Cricket
- வைபவ் சூர்யவன்ஷி அடுத்த U19 உலகக்கோப்பையில் ஆட முடியாது.. ஷாக் கொடுத்த பிசிசிஐ.. ஏன்?
வைபவ் சூர்யவன்ஷி அடுத்த U19 உலகக்கோப்பையில் ஆட முடியாது.. ஷாக் கொடுத்த பிசிசிஐ.. ஏன்?
U-19 உலகக்கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய காரணமாக விளங்கிய 14 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷியால் அடுத்த U-19 உலகக்கோப்பையில் விளையாட முடியாது. இது ஏன் என்பது குறித்து பார்ப்போம் .

வைபவ் சூர்யவன்ஷி மேட்ச் வின்னர்
ஐசிசி U19 உலகக்கோப்பையில் இந்திய அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. பேட்டிங், பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணி கோப்பையை வென்றது. இந்தியா கோப்பையை வெல்ல வைபவ் சூர்யவன்ஷி முக்கியப் பங்காற்றினார். U-19 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் 175 ரன்கள் குவித்து வைபவ் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.
U-19 உலகக்கோப்பையில் மாஸ் பேட்டிங்
மேலும் இத்தொடரில் ஒரு சதம், மூன்று அரைசதங்களுடன் 439 ரன்கள் எடுத்தார். U-19 உலகக்கோப்பை தொடங்குவதற்கு முன்பே வைபவ் சூர்யவன்ஷி மீது அனைவரின் பார்வையும் இருந்தது. ஏனெனில், அவர் ஆடிய அனைத்து தொடர்களிலும் சதம் அடித்து அசத்தினார். அந்த எதிர்ப்பார்ப்பை உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷி.
2028 U-19 உலகக்கோப்பையில் ஆட முடியாது
உலகக்கோப்பையில் அசத்திய வைபவ் சூர்யவன்ஷி 2028 U-19 உலகக்கோப்பையில் ஆட முடியாது என தகவல் வெளியாகி உள்ளது. வைபவ் சூர்யவன்ஷிக்கு இப்போது 14 வயது. அடுத்த U-19 உலகக்கோப்பை 2028-ல் நடக்கும். அப்போது அவருக்கு 16 வயதுதான். ஆனாலும், பிசிசிஐ-யின் 2016 விதிமுறை அவரது கனவில் மண்ணை அள்ளிப் போட்டுள்ளது.
பிசிசிஐயின் இந்த விதி தான் காரணம்
பிசிசிஐ விதியின்படி, ஒரு வீரர் ஒருமுறை U-19 உலகக்கோப்பையில் ஆடிவிட்டால், மீண்டும் அதே தொடருக்கு தகுதி பெறமாட்டார். வயது மோசடியைத் தடுக்க 2016-ல் இந்த விதி கொண்டுவரப்பட்டது. வீரர்கள் சீனியர் அணிக்கு முன்னேற வேண்டும் என்பதற்காக இந்த விதி கொண்டுவரப்பட்டது. ராகுல் டிராவிட் 2016-ல் இந்த ஆலோசனையை வழங்கினார். எனவே இந்த விதிகளின் கீழ் 2028 U-19உலகக்கோப்பையில் வைபவ் சூர்யவன்ஷியால் ஆட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

