- Home
- Sports
- Sports Cricket
- எளிமையான கிராமத்து வீடு முதல் சொகுசு அரண்மனை வரை.. வியக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றிப் பயணம்!
எளிமையான கிராமத்து வீடு முதல் சொகுசு அரண்மனை வரை.. வியக்க வைக்கும் வைபவ் சூர்யவன்ஷியின் வெற்றிப் பயணம்!
Vaibhav Sooryavanshi: பீகாரில் உள்ள வைபவ் சூர்யவன்ஷியின் பூர்வீக வீடு, அவரது போராட்டம், ஒழுக்கம் மற்றும் குடும்ப ஆதரவின் அடையாளம். இந்த எளிமையான வீடு, அவரது கிரிக்கெட் பயணத்தை எப்படி வடிவமைத்தது என்பதைப் பார்க்கலாம்.

வைபவ் சூர்யவன்ஷியின் எளிமையான 2 மாடி வீடு
இந்திய கிரிக்கெட்டின் இளம் அசுரனாக உருவெடுத்துள்ளார் வைபவ் சூர்யவன்ஷி. வெறும் 15 வயதில் அசாத்திய உயரங்களை அவர் தொட்டிருந்தாலும் இதற்கு பின்னால் அவரது கடின உழைப்பும், குடும்பத்தினரின் அர்ப்பணிப்பும் இருக்கிறது.
சமஸ்திபூர் மாவட்டம், தாஜ்பூரில் உள்ள மோதிப்பூர் கிராமத்தில்தான் வைபவ் சூர்யவன்ஷியின் இந்த இரண்டு மாடி வீடு இருக்கிறது. பசுமை நிறைந்த, திறந்தவெளி சூழலில் அமைந்துள்ள இந்த வீடு, ஒரு நடுத்தர விவசாயக் குடும்பத்தின் வாழ்க்கையை காட்டுகிறது. ஆடம்பரத்தை விட, அத்தியாவசியத் தேவைகளுக்காகவே இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. ஒரு சிறிய பால்கனி, எளிமையான சுற்றுப்புறம் எனப் பார்க்கவே யதார்த்தமாக இருக்கிறது.
விடாமுயற்சியின் சின்னம்
இளமைக் காலமும் குடும்ப ஆதரவும்
வீட்டுக்குப் பின்னாலேயே பயிற்சி மைதானம்
குடும்பத்தின் தியாகங்கள்
சொத்து மதிப்பும் மும்பை வீடும்
No Broker தளத்தின்படி, பீகாரில் உள்ள இந்த வீட்டின் மதிப்பு சுமார் ரூ.20 லட்சம் முதல் ரூ.60 லட்சம் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வைபவ் தனது வேர்களை மறக்கவில்லை என்றாலும், ஐபிஎல் மூலம் கிடைத்த வெற்றியால், மும்பையில் ரூ.2.5 முதல் ரூ.3 கோடி மதிப்புள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கியுள்ளார். ஆனாலும், அவரது பூர்வீக வீடுதான் அவரது பயணத்தின் அஸ்திவாரம். எளிய தொடக்கங்களில் இருந்து எப்படி பெரிய கனவுகள் உருவாகும் என்பதற்கு இதுவே சாட்சி.

