Duleep Trophy: சென்னையில் நடந்து வரும் துலீப் டிராபி இறுதிப் போட்டியில் வைபவ் சூர்யவன்ஷிக்கும், திலக் வர்மாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்ப்போம்.
சென்னையில் கிழக்கு மண்டலம் மற்றும் தெற்கு மண்டல அணிகளுக்கு இடையே துலீப் டிராபி இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற கிழக்கு மண்டலம் பேட்டிங்கை தேர்வு செய்து, நல்ல தொடக்கத்தை பெற்றது. இந்த போட்டியின்போது நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், வைபவ் சூர்யவன்ஷி மற்றும் திலக் வர்மா இடையேயான மோதலை அம்பயர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
துலீப் டிராபி: திலக்-வைபவ் இடையே மோதல்
வைபவ் சூர்யவன்ஷி மற்றும் திலக் வர்மா இடையே முதலில் விளையாட்டாக தொடங்கிய ஸ்லெட்ஜிங், பின்னர் தீவிர வாக்குவாதமாக மாறியது. நிலைமை மோசமடைவதை உணர்ந்த அம்பயர்கள், இரு வீரர்களையும் அழைத்து சமாதானப்படுத்தினர்.
கிழக்கு மண்டலத்தின் முதல் இன்னிங்ஸின் 11வது ஓவரில் இந்த சம்பவம் நடந்தது. தெற்கு மண்டல கேப்டன் திலக் வர்மா, பேட்டிங் செய்துகொண்டிருந்த வைபவ் சூர்யவன்ஷியை தொடர்ந்து வம்பிழுத்துக் கொண்டிருந்தார். கிழக்கு மண்டலத்தின் துணை கேப்டனான வைபவ்வும் பதிலடி கொடுத்துக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் திலக், வைபவ்வை பார்த்து 'இவர் ஒரு துணை கேப்டன்' என்று கிண்டலாக கூறினார். சில நிமிடங்களிலேயே இந்த ஸ்லெட்ஜிங் கடுமையான வாக்குவாதமாக மாறியது.
வைபவ் சூர்யவன்ஷியை சீண்டிய திலக் வர்மா
முதலில் திலக் வர்மா, சூர்யவன்ஷி அருகே சென்று விளையாட்டாக அவர் மீது இடிப்பது போல சைகை செய்தார். ஆனால், இதில் பொறுமையிழந்த வைபவ், திலக்கை நேருக்கு நேராக எதிர்கொண்டு பதிலடி கொடுத்தார். உடனடியாக மற்ற வீரர்கள் மற்றும் அம்பயர்கள் தலையிட்டு இருவரையும் பிரித்துவிட்டனர்.
திலக் வர்மாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதற்கு முன்பு, வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிமன்யு ஈஸ்வரன் ஜோடி, கிழக்கு மண்டலத்திற்கு 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கத்தை அளித்தனர். வைபவ் தனது இன்னிங்ஸில் 37 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
Women's Asia Cup: பாகிஸ்தானை ஊதித் தள்ளிய இந்திய மகளிர் அணி! ஆசியக் கோப்பையில் ஹாட்ரிக் வெற்றி!
பந்துவீச்சிலும் அசத்திய வைபவ்
இதற்கு முன்பு, நார்த் ஈஸ்ட் மண்டலத்திற்கு எதிரான காலிறுதிப் போட்டியில் வெறும் 8 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த வைபவ் பந்துவீச்சில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஆனால், சென்ட்ரல் மண்டலத்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்ஸில் 92 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 40 ரன்களும் எடுத்தார். இதன் மூலம், துலீப் டிராபியில் அரைசதம் அடித்த இளம் வயது பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
கிழக்கு மண்டல அணி பிளேயிங் லெவன்: அபிமன்யு ஈஸ்வரன், வைபவ் சூர்யவன்ஷி, குமார் குஷாக்ரா, சுதீப் குமார் கராமி, இஷான் கிஷன், ஷிகர் மோகன், அனுகுல் ராய், முகமது கௌனைன் குரேஷி, முகமது ஷமி, அபிஜித் கே சர்க்கார், முகேஷ் குமார்.
தெற்கு மண்டல அணி பிளேயிங் லெவன்: ரிக்கி புய், நாராயண் ஜெகதீசன், படிக்கல், ஷேக் ரஷீத், திலக் வர்மா, ஸ்மரன் ரவிச்சந்திரன், ஷ்ரேயஸ் கோபால், திரிபுராணா விஜய், சிராஜ், சாம மிலிந்த், எம்.டி. நிதிஷ்.


