MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • ரசிகர்களுக்கு குட் நியூஸ்; 2 போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்கும் ஆர்சிபி!

ரசிகர்களுக்கு குட் நியூஸ்; 2 போட்டிக்கான டிக்கெட் கட்டணத்தை திருப்பி கொடுக்கும் ஆர்சிபி!

RCB IPL 2025 Ticket Refund for Cancelled Match in Bengaluru : மே 13 மற்றும் 17 தேதிகளில் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியானது டிக்கெட் பணத்தை முழுமையாகத் திருப்பித் தருவதாக அறிவித்துள்ளது.

2 Min read
Rsiva kumar| ANI
Published : May 11 2025, 04:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

RCB IPL 2025 Ticket Refund for Cancelled Match in Bengaluru : மே 13 மற்றும் 17 தேதிகளில் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறவிருந்த போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியானது டிக்கெட் பணத்தை முழுமையாகத் திருப்பித் தருவதாக சனிக்கிழமையன்று அறிவித்தது.

இந்தியா-பாகிஸ்தான் இடையேயான பதற்றம் அதிகரித்து வருவதால், நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) வெள்ளிக்கிழமை அறிவித்தது.

26
ஐபிஎல் 2025 - இந்தியன் பிரீமியர் லீக்

ஐபிஎல் 2025 - இந்தியன் பிரீமியர் லீக்

இதுவரையில் நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் 2025 தொடரின் 18ஆவது சீசனில் 58 போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது. கடைசியாக பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியும் மின் தடை காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து எஞ்சிய போட்டிகள் ஒரு வாரத்திற்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Related Articles

Related image1
ஆர்சிபிக்கு பெரும் பின்னடைவு! 'ஸ்டார்' வீரர் விலகல்! அட! மாற்று வீரர் இவரா?
Related image2
விராட் கோலியின் கனவு, அடிக்கடி சொல்லும் டயலாக் என்ன? உண்மையை சொன்ன ஸ்கூல் டீச்சர்!
36
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஹோம் மைதான டிக்கெட் கட்டணம்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஹோம் மைதான டிக்கெட் கட்டணம்

இதன் காரணமாக வரும் 13 மற்றும் 17ஆம் தேதிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது ஹோம் மைதானத்தில் 2 போட்டிகளில் விளையாட இருந்தது. ஆனால், அந்தப் போட்டிகள் தள்ளி வைக்கப்பட்ட நிலையில் அறிவிக்கப்பட்டபடி அந்த மைதானத்தில் போட்டிகள் நடைபெறுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும், போட்டிகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்படுவதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. இந்த சூழலில் பெங்களூருவில் நடக்க இருந்த 2 போட்டிகளுக்கான டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திருப்பி கொடுக்க ஆர்சிபி முடிவு செய்துள்ளது.

46
ஆர்சிபி போட்டிகள் டிக்கெட் திரும்ப கொடுக்கப்படும்

ஆர்சிபி போட்டிகள் டிக்கெட் திரும்ப கொடுக்கப்படும்

இது குறித்து RCB தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், "மே 13 மற்றும் 17, 2025 தேதிகளில் சின்னச்சுவாமி மைதானத்தில் நடைபெறவிருந்த #RCBvSRH மற்றும் #RCBvKKR போட்டிகளுக்கான அசல் டிக்கெட் வைத்திருப்பவர்கள், விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, முழு பணத்தைத் திரும்பப் பெறத் தகுதியுடையவர்கள். நேரடி டிக்கெட் வைத்திருப்பவர்கள் தங்கள் டிக்கெட்டுகளை கையில் வைத்திருக்க வேண்டும். டிஜிட்டல் டிக்கெட் வைத்திருப்பவர்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களும் உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் அல்லது தொலைபேசி எண் வழியாக விரைவில் அனுப்பப்படும்." என்று பதிவிட்டுள்ளது.

56
ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்த பிசிசிஐ

ஐபிஎல் மீதமுள்ள போட்டிகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்த பிசிசிஐ

போட்டியின் மீதமுள்ள போட்டிகளை ஒரு வாரத்திற்கு ஒத்திவைப்பதாக அறிவித்த பிசிசிஐ, புதிய அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என்றது. "நடப்பு ஐபிஎல் 2025 போட்டிகளின் மீதமுள்ள போட்டிகளை உடனடியாக ஒரு வாரத்திற்கு நிறுத்தி வைக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) முடிவு செய்துள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்து, நிலைமையை விரிவாக மதிப்பிட்ட பிறகு, போட்டியின் புதிய அட்டவணை மற்றும் இடங்கள் குறித்த கூடுதல் புதுப்பிப்புகள் விரைவில் அறிவிக்கப்படும்," என்று பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா அறிக்கையில் தெரிவித்தார்.

66

"தங்கள் வீரர்களின் கவலைகள் மற்றும் உணர்வுகளைத் தெரிவித்த பெரும்பாலான அணிகள், ஒளிபரப்பாளர், ஸ்பான்சர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்துகளுக்குப் பிறகு, முக்கிய பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு ஐபிஎல் நிர்வாகக் குழு இந்த முடிவை எடுத்தது; பிசிசிஐ நமது ஆயுதப் படைகளின் பலம் மற்றும் தயார்நிலையில் முழு நம்பிக்கை வைத்துள்ளது, அனைத்து பங்குதாரர்களின் கூட்டு நலனுக்காகச் செயல்படுவது புத்திசாலித்தனம் என்று வாரியம் கருதியது," என்று அவர் மேலும் கூறினார்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு
ஐபிஎல் 2025
இந்தியன் பிரீமியர் லீக்
ஐபிஎல் 2025 பிளேஆஃப் அணிகள்
ஐபிஎல்
டிக்கெட் முன்பதிவு
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved