MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • இந்திய வீரர்களுடன் ஜாலியாக பேசிய இங்கிலாந்து மன்னர் சார்லஸ்! சுப்மன் கில்லிடம் சொன்னது என்ன?

இந்திய வீரர்களுடன் ஜாலியாக பேசிய இங்கிலாந்து மன்னர் சார்லஸ்! சுப்மன் கில்லிடம் சொன்னது என்ன?

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள், வீராங்கனைகள் இங்கிலாந்து மன்னர் சார்லஸை சந்தித்து பேசினார்கள். அப்போது மன்னர் ஜாலியாக உரையாடினார். 

2 Min read
Author : Rayar r
| Updated : Jul 15 2025, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 Indian Team Players Meet King Charles Of England
Image Credit : ANI

Indian Team Players Meet King Charles Of England

இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்த போட்டியில் இரு அணிகளும் முதல் இன்னிங்சில் 387 ரன்கள் எடுத்தன. பின்பு இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 192 ரன்களுக்கு ஆல் அவுட்டாக இலக்கை துரத்திய இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இந்நிலையில், இந்திய அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் இங்கிலாந்து மன்னர் சார்லஸை லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில் சந்தித்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மன்னர் சார்லஸை சந்தித்த இந்திய அணி வீரர்கள்
Image Credit : ANI

மன்னர் சார்லஸை சந்தித்த இந்திய அணி வீரர்கள்

இந்திய ஆண்கள் அணியின் கேப்டன் சுப்மன் கில், இந்திய பெண்கள் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர், வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் நிர்வாக ஊழியர்களுடன் மன்னர் மூன்றாம் சார்லஸை சந்தித்தனர். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் இங்கிலாந்துக்கான இந்திய தூதர் விக்ரம் டோரைஸ்வாமி ஆகியோர் இந்த சந்திப்பில் உடனிருந்தனர்.

வீரர்களுடன் ஜாலியாக பேசிய மன்னர்

மன்னர் சார்லஸுடன் இந்திய அணி வீரர்கள், வீராங்கனைகள் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். மன்னர் சார்லஸ் வீரர் மற்றும் வீராங்கனைகளுடன் ஜாலியாக உரையாடினார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டின் பரபரப்பான தருணங்கள் குறித்து சுப்மன் கில்லுடன் மன்னர் சார்லஸ் விவாதித்தார். முகமது சிராஜை அவுட்டாக்கிய ஷோயப் பஷீரின் பந்து ஸ்டம்புகளுக்குள் எப்படிச் சுழன்றது என்பதை மன்னர் குறிப்பாகச் சுட்டிக்காட்டினார். அதற்கு கில் பதிலளித்தார்.

Related Articles

Related image1
IND VS ENG: நடுவர்களுடன் சுப்மன் கில் கடும் வாக்குவாதம்! துணைக்கு சென்ற சிராஜ்! என்ன நடந்தது?
Related image2
இங்கிலாந்து வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏன்? என்ன நடந்தது? ஓபனாக பேசிய சுப்மன் கில்!
34
பும்ரா, ரிஷப் பண்ட்டுடன் உரையாடினார்
Image Credit : ANI

பும்ரா, ரிஷப் பண்ட்டுடன் உரையாடினார்

மேலும் மன்னர் சார்லஸ் துணை கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் உலகின் சிறந்த வீரர் ஜஸ்பிரித் பும்ராவுடனும் உரையாடினார். தொடர்ந்து அவர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பிறர் உட்பட இந்திய அணியின் மற்ற வீரர்களிடமும் உரையாடினார். ஆண்கள் அணியை சந்தித்த பிறகு, மன்னர் சார்லஸ் இந்திய மகளிர் அணியிலும் சில வீராங்கனைகளுடன் சுருக்கமாக உரையாடினார்.

மன்னரை சந்தித்ததில் மகிழ்ச்சி

மன்னர் சார்லஸை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்த சுப்மன் கில், ''மன்னரை சந்தித்தது அற்புதமாக இருந்தது. அவர் எங்களை இங்கு அழைத்தது மிகவும் அன்பாகவும் தாராளமாகவும் இருந்தது என்று நினைக்கிறேன், மேலும் மன்னரை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறோம், மேலும் எங்களுக்கு சில நல்ல உரையாடல்கள் இருந்தன" என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

44
சுப்மன் கில்லிடம் மன்னர் சொன்னது என்ன?
Image Credit : ANI

சுப்மன் கில்லிடம் மன்னர் சொன்னது என்ன?

மூன்றாவது டெஸ்டின் இறுதி நேரங்களைப் பற்றி மன்னர் சார்லஸுடன் நடந்த உரையாடலைப் பற்றி அவர் கூறினார், "ஆம், எங்கள் கடைசி பேட்ஸ்மேன் அவுட்டான விதம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று அவர் எங்களிடம் கூறினார். 

பந்து ஸ்டம்புகளில் உருண்டு கொண்டிருந்தது, அதன் பிறகு எங்களுக்கு எப்படி இருந்தது என்று அவர் எங்களிடம் கேட்டார், அது எங்களுக்கு துரதிர்ஷ்டவசமான போட்டி என்று நாங்கள் அவரிடம் சொன்னோம். அது எந்த வழியிலும் சென்றிருக்கலாம், ஆனால் அடுத்த ஆட்டங்களில் எங்களுக்கு நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும் என்று நம்புகிறோம்'' என்று கில் தெரிவித்தார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Recommended image2
Virat Kohli: 12 சீசன்களில் 400+ ரன்கள்..! யாருமே தொட்டுப்பார்க்க முடியாத சாதனை..! மிரட்டும் கோலி
Recommended image3
Vaibhav Sooryavanshi: 15 வயதில் உலக சாதனை! பொல்லார்டையே மிஞ்சிய வைபவ்.. டி20 கிரிக்கெட்டில் புதிய வரலாறு!
Related Stories
Recommended image1
IND VS ENG: நடுவர்களுடன் சுப்மன் கில் கடும் வாக்குவாதம்! துணைக்கு சென்ற சிராஜ்! என்ன நடந்தது?
Recommended image2
இங்கிலாந்து வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ஏன்? என்ன நடந்தது? ஓபனாக பேசிய சுப்மன் கில்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved