MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • என்னய்யா இது! இந்தியாவுக்கு எதிராக விசித்திர சாதனை படைத்த இங்கிலாந்து அணி!

என்னய்யா இது! இந்தியாவுக்கு எதிராக விசித்திர சாதனை படைத்த இங்கிலாந்து அணி!

இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி விசித்திரமான சாதனை படைத்துள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை பார்ப்போம்.

1 Min read
Rayar r
Published : Aug 01 2025, 05:45 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ind vs eng test
Image Credit : x

ind vs eng test

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நீண்ட இடைவெளிக்கு பிறகு களமிறங்கிய கருண் நாயர் அரை சதம் (57 ரன்) அடித்து அசத்தினார். சாய் சுதர்சன் 38 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இதேபோல் ஜோஷ் டங் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

24
இங்கிலாந்து அணி விசித்திர சாதனை
Image Credit : ANI

இங்கிலாந்து அணி விசித்திர சாதனை

இந்திய கேப்டன் ஷுப்மன் கில் இந்தத் தொடரில் அனைத்து ஐந்து போட்டிகளிலும் டாஸில் தோல்வியடைந்தார். இது சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு அணியின் தொடர்ச்சியான டாஸ் தோல்விகளில் ஒரு விசித்திரமான சாதனையாகும். இதற்கு முன் 1999-ல் மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ந்து 12 டாஸ் தோல்வியடைந்தது. இதேபோல் இங்கிலாந்து அணியும் ஒரு விசித்திர சாதனை படைத்துள்ளது.

Related Articles

Related image1
இதுக்கு ஓகே சொன்னா தான் விளையாடுவேன்! பிசிசிஐக்கு பும்ரா நிபந்தனை! உண்மையை போட்டுடைத்த கோச்!
Related image2
காயமடைந்த இங்கிலாந்து வீரர்! உடனே கருண் நாயர் 'செய்த' செயல்! இவரு தான்யா மனுசன்! ரசிகர்கள் நெகிழ்ச்சி!
34
எக்ஸ்டிரா வகையில் 38 ரன்கள்
Image Credit : Getty

எக்ஸ்டிரா வகையில் 38 ரன்கள்

அதாவது இங்கிலாந்து அணியினர் பவிலிங்கில் எக்ஸ்டிரா வகையில் 38 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இதில் 16 வைடு, 4 நோ பால்கள் ஆகியவை அடங்கும். பைஸ் வகையில் 12 ரன்களும் அடங்கும். இங்கிலாந்து வீரர் ஜோஸ் டங் மட்டுமே 4 வைடுகள் உள்பட அதிக ரன்களை வாரி வழங்கினார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் இந்திய அணியில் 2வது அதிகப்பட்ச ரன்னே எக்ஸ்டிரா தான். கருண் நாயர் 56 ரன்களும், சாய் சுதர்சன் 38 ரன்களும் எடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து எக்ஸ்டிரா வகையில் 38 ரன்கள் கிடைத்துள்ளது.

44
கிறிஸ் வோக்ஸ் விலகல்
Image Credit : Getty

கிறிஸ் வோக்ஸ் விலகல்

முன்னதாக, இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் தோள்பட்டை காயம் காரணமாக 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகியுள்ளார். ஐந்தாவது டெஸ்டின் முதல் நாளில் தோள்பட்டையில் காயமடைந்த வோக்ஸ், டெஸ்ட் போட்டியில் மேற்கொண்டு விளையாட மாட்டார் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved