பத்தாண்டின் சிறந்த ஒருநாள் லெவன்..! கேப்டன் தோனி.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்
பத்தாண்டின் சிறந்த ஒருநாள் லெவனை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, பத்தாண்டின் சிறந்த ஒருநாள் லெவனை தேர்வு செய்துள்ளார். அதன்படி, பத்தாண்டின் சிறந்த ஒருநாள் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் தென்னாப்பிரிக்காவின் ஹாஷிம் ஆம்லாவை தேர்வு செய்துள்ளார். 2013ல் ஒருநாள் கிரிக்கெட்டில் முதல் இரட்டை சதமடித்த ரோஹித், அதன்பின்னர் 2 இரட்டை சதங்களை அடித்தார்.
3ம் வரிசைக்கு அந்த பேட்டிங் ஆர்டரின் அடையாளமாக திகழும், சமகாலத்தின் சிறந்த வீரரான கோலியையும் 4ம் வரிசைக்கு டிவில்லியர்ஸையும் தேர்வு செய்துள்ளார். விக்கெட் கீப்பராக தோனியை தேர்வு செய்துள்ள ஆகாஷ் சோப்ரா, அவரையே பத்தாண்டின் சிறந்த ஒருநாள் அணிக்கு கேப்டனாகவும் தேர்வு செய்துள்ளார்.
ஆல்ரவுண்டர்களாக வங்கதேசத்தின் ஷகிப் அல் ஹசன் மற்றும் பாகிஸ்தானின் முகமது ஹஃபீஸ் ஆகியோரையும் ஃபாஸ்ட் பவுலர்களாக லசித் மலிங்கா, பும்ரா மற்றும் 2015 உலக கோப்பையின் தொடர் நாயகன் மிட்செல் ஸ்டார்க் ஆகியோரையும் ஸ்பின்னராக தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிரையும் தேர்வு செய்துள்ளார்.
ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்த பத்தாண்டின் சிறந்த ஒருநாள் லெவன்:
ரோஹித் சர்மா, ஹாஷிம் ஆம்லா, விராட் கோலி, டிவில்லியர்ஸ், தோனி(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷகிப் அல் ஹசன், முகமது ஹஃபீஸ், லசித் மலிங்கா, மிட்செல் ஸ்டார்க், ஜஸ்ப்ரித் பும்ரா, இம்ரான் தாஹிர்.