MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • திருச்செந்தூர் முருகன் கோவில் அற்புதங்கள் : இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள்

திருச்செந்தூர் முருகன் கோவில் அற்புதங்கள் : இதுவரை வெளிவராத ரகசிய தகவல்கள்

முருகப் பெருமானின் அறுபடைவீடுகளில் ஒன்றாக இருக்கும் திருச்செந்தூர் சுப்ரமணியசாமி கோவில், ஏராளமான ஆச்சரியங்கள், அதிசயங்கள். அற்புதங்கள் நிறைந்தது. இந்த கோவில் பற்றி இதுவரை பலருக்கும் தெரியாத சில ரகசிய தகவல்கள் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Priya Velan
Published : Jul 05 2025, 06:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
கடிகார மாளிகை பிரணவ வடிவின் கோபுரம்:
Image Credit : stockPhoto

கடிகார மாளிகை - பிரணவ வடிவின் கோபுரம்:

திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம், ஒன்பது நிலைகளைக் கொண்ட பிரமாண்டமான கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாகும். இந்த கோபுரத்தின் ஒன்பதாவது மாடத்தில் "கடிகார மாளிகை" அமைந்துள்ளது. இக்கோவில், 'ஓம்' எனும் பிரணவ மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு, வாஸ்து சாஸ்திர விதிகளின்படி மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. வடக்கு-தெற்காக 300 அடி நீளமும், கிழக்கு-மேற்காக 214 அடி அகலமும் கொண்ட இக்கோவிலின் அமைப்பு, தெய்வீக ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்த கடிகார மாளிகை, கோவில் கட்டிடக்கலையின் ஒரு விந்தைமிகு அம்சமாக பக்தர்களை வியப்பில் ஆழ்த்துகிறது.

27
முதல் தீபாராதனை - சிவனும் முருகனும் இணையும் அருள்:
Image Credit : stockPhoto

முதல் தீபாராதனை - சிவனும் முருகனும் இணையும் அருள்:

திருச்செந்தூர் முருகப்பெருமான் கோவிலின் மிக முக்கியமான மற்றும் தனித்துவம் வாய்ந்த சடங்குகளில் ஒன்று, "முதல் தீபாராதனை" ஆகும். சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின்னர், முருகப்பெருமான் தனது வெற்றிக்கு நன்றியாக சிவபெருமானை பூஜித்தார். இதன் காரணமாக, மூலவர் முருகப்பெருமானின் திருவுருவச் சிலைக்குப் பின்னால் ஒரு லிங்க வடிவில் சிவபெருமான் எழுந்தருளியுள்ளார். அதேபோல, சண்முகர் சன்னதியிலும் சண்முகப் பெருமானுக்குப் பின்னால் ஒரு லிங்கம் உள்ளது.

இங்கு தினமும், மூலவர் மற்றும் சண்முகப் பெருமானுக்கு தீபாராதனை காட்டுவதற்கு முன்னர், இந்த சிவலிங்கங்களுக்கு முதல் தீபாராதனை காட்டப்படுகிறது. இந்த லிங்கங்கள் கருவறையின் இருளில் மறைந்திருப்பதால், தீபாராதனையின் ஒளியில் மட்டுமே இவர்களை தரிசிக்க முடியும். மேலும், மூலவருக்கு வலப்புறத்தில் "பஞ்ச லிங்கங்கள்" அமைந்துள்ளன. இந்த லிங்கங்களுக்கு முருகப்பெருமானே பூஜை செய்வதாக ஐதீகம் என்பதால், மனிதர்கள் பூஜைகள் செய்வதில்லை.

Related Articles

Related image1
richest temples: தமிழ்நாட்டின் டாப் 10 பணக்கார கோவில்கள் எவை தெரியுமா?
Related image2
விஷ்ணு சகஸ்ரநாமம் தினமும் சொன்னால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?
37
ரகசிய தீபாராதனை:
Image Credit : stockPhoto

ரகசிய தீபாராதனை:

மூலவருக்குச் செய்யப்படும் சிறப்பு அபிஷேகங்களில் தாரபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஒரு பெரிய வெள்ளிப் பாத்திரத்தில் பால் நிரப்பி, அதில் சிறு துளைகள் வழியாக சுமார் 3 மணி நேரம் பால் தாரை தாரையாக மூலவரின் திருமேனியின் மீது விழச் செய்யப்படும் இந்த அபிஷேகம் காண கண்கோடி வேண்டும். பிறகு சுவாமிக்குத் திரையிட்டு தீபாராதனை காட்டுகின்றனர். பின்னர் ஆறுமுகனின் முன் பள்ளியறை சொக்கரை வைத்துத் தீபாராதனை செய்வர். இதுவே "ரகசிய தீபாராதனை" என்றும் அழைக்கப்படுகிறது.

47
திருச்செந்தூர் கோவிலின் சிறப்புகள்:
Image Credit : stockPhoto

திருச்செந்தூர் கோவிலின் சிறப்புகள்:

வீரபாகு க்ஷேத்திரம்: திருச்செந்தூர் முருகன் கோவில், "வீரபாகு க்ஷேத்திரம்" என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு மூலவரை வழிபடுவதற்கு முன், முருகனின் தளபதியான வீரபாகு தேவருக்கு 'பிட்டு' படைத்து வழிபடுவது வழக்கம். இது வீரபாகுவின் தியாகத்தையும், கோவில் காவல் தெய்வமாக அவரது முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.

இலை விபூதி பிரசாதம்: திருச்செந்தூர் ஆலயத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற பிரசாதம், "இலை விபூதி" ஆகும். இத்தலத்தில் உள்ள பன்னீர் மரங்கள் தேவர்களின் வடிவம் என்று நம்பப்படுகிறது. 12 நரம்புகள் கொண்ட பன்னீர் மர இலைகளில் முருகப்பெருமான் தனது பன்னிரு கரங்களால் திருநீறு அளித்து விஸ்வாமித்திரரின் காசநோயை நீக்கியதன் தாத்பரியமாக இந்த இலை விபூதி வழங்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சூரசம்ஹாரத்திற்குப் பிறகு முருகன் தனது பரிவாரங்களுக்கு விபூதி அளித்ததன் நினைவாகவும் இது வழங்கப்படுகிறது.

57
நைவேத்திய சிறப்பு:
Image Credit : stockPhoto

நைவேத்திய சிறப்பு:

யோக நிஷ்டையில் உள்ள மூலவர் முருகப்பெருமானுக்குப் படைக்கப்படும் நைவேத்தியத்தில் காரம், புளிப்பு போன்ற பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. ஆனால், சண்முகப் பெருமானுக்குப் படைக்கப்படும் நைவேத்தியத்தில் காரமும் புளிப்பும் உண்டு. பருப்புக் கஞ்சி, தோசை, தேன்குழல், அதிரசம், அப்பம், பிட்டமுது, தினைமாவு ஆகியவை நைவேத்தியங்களாகப் படைக்கப்படுகின்றன.

67
கந்த சஷ்டி விழா:
Image Credit : stockPhoto

கந்த சஷ்டி விழா:

மற்ற கோவில்களில் 6 நாட்கள் நடைபெறும் கந்த சஷ்டி விழா, திருச்செந்தூரில் 12 நாட்கள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. சூரசம்ஹாரத்திற்குப் பிறகு, ஜெயந்திநாதர் (முருகனின் உற்சவர் மூர்த்தி) மகாதேவர் சன்னதிக்கு எழுந்தருளும்போது, ஒரு கண்ணாடி வைக்கப்பட்டு, அதில் தெரியும் அவரது பிம்பத்திற்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. போரில் வெற்றி பெற்ற முருகனை குளிர்விக்கும் விதமாக இந்த சாயாபிஷேகம் (நிழல் அபிஷேகம்) நடைபெறுகிறது. சூரசம்ஹாரம் முடிந்த ஏழாம் நாளில் முருகன் - தெய்வானை திருக்கல்யாணமும், அடுத்த ஐந்து நாட்கள் ஊஞ்சல் சேவையும் நடைபெறுகிறது.

77
அஷ்ட லிங்கங்கள்:
Image Credit : stockPhoto

அஷ்ட லிங்கங்கள்:

இக்கோவிலில் எட்டு லிங்கங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கு பின்னால் ஐந்து லிங்கங்களும், கருவறைக்குள் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் ஆகிய இரண்டு லிங்கங்களும், சண்முகர் மண்டபத்தில் ஆத்ம லிங்கமும் உள்ளன. இறைவன் பஞ்ச பூதங்களாகவும், சூரிய சந்திரர்களாகவும், உயிர்களாகவும் விளங்குகிறார் என்பதை இவை உணர்த்துகின்றன.

About the Author

PV
Priya Velan
இவர் இணைய பத்திரிக்கை துறையில் 10 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். லைஃப் ஸ்டைல் கட்டுரைகள் மட்டுமின்றி சினிமா, அரசியல் ஆகிய செய்திகள் எழுதுவதிலும் திறன் படைத்தவர்.
கோவில் நிகழ்வுகள்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved