MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Spiritual
  • Spiritual: எறும்பு, புறா, பசு மாட்டை பார்த்தா இதை மட்டும் செய்யுங்க.! நீங்கதான் அடுத்த அம்பானி.!

Spiritual: எறும்பு, புறா, பசு மாட்டை பார்த்தா இதை மட்டும் செய்யுங்க.! நீங்கதான் அடுத்த அம்பானி.!

தினசரி வாழ்வில் சில எளிய ஆன்மிக பழக்கங்களை பின்பற்றுவதன் மூலம் வீட்டில் செல்வத்தையும் அமைதியையும் நிலைநிறுத்தலாம். பறவைகளுக்கு உணவளிப்பது, மங்களச் சின்னங்களைப் பார்ப்பது  போன்ற செலவில்லாத செயல்கள் வறுமையை நீக்கி வளத்தை பெருக்கும் என நம்பப்படுகிறது.

2 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Nov 14 2025, 02:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
செல்வத்தை தரும் ஆன்மிக ரகசியம்
Image Credit : Asianet News

செல்வத்தை தரும் ஆன்மிக ரகசியம்

வீட்டில் அமைதியும், செழிப்பும் நிலைக்க வேண்டுமென்றால், நம் முன்னோர்கள் சொல்லி வைத்த சில எளிய ஆன்மிகச் செயல்களை தினசரி வாழ்க்கையில் பழக்கமாக்கிக் கொள்வது மிகுந்த பலனை தரும். அதிக சடங்குகள், செலவுகள் எதுவும் வேண்டாம்; தினமும் சில நிமிடங்கள் செலவிட்டாலே போதும். குடும்பத்தில் சுப பாக்கியம் நிலைத்து, நேர்மை, அமைதி, செல்வம் ஆகியவை தானாகவே பெருகத் தொடங்கும் என்று பெரியோர்கள் கூறுகிறார்கள்.

பறவைகளுக்கும் பசுக்களுக்கும் உணவு வழங்குவது

காலையில் எழுந்ததும் பறவைகள் சாப்பிட தானியங்களை வீட்டின் முன் இடுவது, அருகில் உள்ள பசுவுக்கு பசுந்தழை கொடுப்பது போன்ற கருணை செயல்கள் நம் வாழ்வில் நல்ல அதிர்ஷ்டத்தை வரவேற்கும். இந்த நற்காரியங்கள் வீட்டிலிருந்து வறுமை நீங்கச் செய்வதோடு, நீண்டநாள் செழிப்பையும் தருவதாக நம்பப்படுகிறது.

24
செல்வ குறியீடுகளைப் பார்ப்பது
Image Credit : Asianet News

செல்வ குறியீடுகளைப் பார்ப்பது

காலை நடைமுறைகளைத் தொடங்குவதற்கு முன் இல்லாள், ஆடு, பசு, தங்க நாணயம், தங்கக் குடம் போன்ற மங்களச் சின்னங்களின் படத்தை ஒரு தரிசனம் செய்வது நல்ல பலன்களை ஈர்க்கும் பழக்கமாக கருதப்படுகிறது. இது புதிய நாளை நேர்மறை ஆற்றலுடன் தொடங்க உதவும்.

வீட்டு வாசலில் சர்க்கரை தூவுவது

குளித்து முடித்ததும் ஒரு சிறிதளவு சர்க்கரையை வீட்டின் வாசலில் தூவி வரலாம். இது எறும்புகள் மற்றும் சிறு உயிர்களுக்கு உணவாகிப் போவதுடன், வீட்டில் தொல்லை தரும் நோய், தோஷங்கள் அகன்று செல்வ வளர்ச்சி ஏற்படும் என பெரியோர் நம்பிக்கை.

Related Articles

Related image1
Spiritual: நிலப் பிரச்னைகளை தீர்க்கும் வராஹி அம்மன்.! எந்தக் கிழமையில் வழிபடலாம்?
Related image2
Spiritual: துளசி மாலையை யாரெல்லாம் அணியலாம் தெரியுமா? அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் இதுதான்.!
34
கோயில்களில் ‘இணை கயல்’ தரிசனம்
Image Credit : Asianet News

கோயில்களில் ‘இணை கயல்’ தரிசனம்

சில கோயில்களின் விதானங்களில் உள்ள ‘இரட்டை மீன்’ சிற்பம் மிகுந்த மங்களச் சின்னமாக கருதப்படுகிறது. கோயிலுக்கு செல்லும் போது இதனை ஒரு முறை தரிசித்தாலே குடும்பத்தில் சுபிட்சம், வளம், நலன் ஆகியவை பெருகும் என்பது பரம்பரை நம்பிக்கை. 

44
பிச்சிப்பூவால் சிவபூஜை
Image Credit : Asianet News

பிச்சிப்பூவால் சிவபூஜை

மல்லிகை வகைகளில் மணம் மிகுந்த பிச்சிப்பூ, சிவபெருமானுக்கு மிகவும் பிரியமானது. பிச்சிப்பூ மாலையை அர்ப்பணித்து சிவனை வழிபட்டால் வீட்டில் செல்வ வளம் பெருகும் என்றும் விரும்பிய வரங்கள் கிட்டும் என்றும் நம்பப்படுகிறது.

விபூதி–சந்தனம் கலந்து ‘பஸ்ம லிங்கம்’ வழிபாடு

விபூதி, சந்தனம், பன்னீர் ஆகியவற்றை கலந்து உருவாக்கப்படும் ‘பஸ்ம லிங்கம்’ சிவபூஜையில் சிறப்பு பெற்றது. இதனை மனமார வழிபட்டால் சத்ரு ஜெயம், காரிய வெற்றி, செல்வச் செழிப்பு ஆகியவை விரைவில் கிடைக்கும் என்று ஆன்மிக அறிஞர்கள் கூறுகின்றனர். இவ்வாறு எளிமையான ஆன்மிக வழிமுறைகளையும் தினசரி வாழ்க்கையில் பின்பற்றினால், வீட்டில் வளம், அமைதி, செல்வம் ஆகியவை துணை நிற்கும்.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
ஆன்மீகம்
கோவில்
கோவில் நிகழ்வுகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
எரியும் பிணத்தை உண்ணும் வினோத திருவிழா.! திருச்சி ஓயாமரி சுடுகாட்டில் நள்ளிரவில் நடந்த மயானக்கொள்ளை.!
Recommended image2
வீட்டில் இந்த ஓவியம் இருந்தால் செல்வம் பெருகும்.. நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்
Recommended image3
லண்டன் பிக் பென்னுக்கும் முன்னோடி.. பாளையங்கோட்டை தேவால‌யத்தில் 170 ஆண்டுகள் பழமையான கடிகாரம்!
Related Stories
Recommended image1
Spiritual: நிலப் பிரச்னைகளை தீர்க்கும் வராஹி அம்மன்.! எந்தக் கிழமையில் வழிபடலாம்?
Recommended image2
Spiritual: துளசி மாலையை யாரெல்லாம் அணியலாம் தெரியுமா? அணிபவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நியமங்கள் இதுதான்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved