MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Puducherry
  • அரசு பள்ளி மாணவிகளுக்கு மாறுது சீருடை..! புதிய மாடல் எப்படி இருக்குது தெரியுமா?

அரசு பள்ளி மாணவிகளுக்கு மாறுது சீருடை..! புதிய மாடல் எப்படி இருக்குது தெரியுமா?

தமிழ்நாட்டை போன்று புதுச்சேரி அரசு பள்ளிகளிலும் மாணவிகளின் சீருடை மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

1 Min read
Rayar r
Published : Aug 07 2025, 07:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
Uniform Change For Puducherry School Girls
Image Credit : x

Uniform Change For Puducherry School Girls

புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் ஓவர் கோட் அணிய வேண்டும் என அந்த மாநில கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக புதுச்சேரி கல்வித் துறை துணை இயக்குனர் கவுரி வெளியிட்ட சுற்றறிக்கையில், 'அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு சுடிதார் மேல் ஓவர்கோட் அணிய வேண்டும். 

இதற்கான வடிவமைப்புக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், கண்காணிப்பு அதிகாரிகள் பள்ளி தோறும் சென்று தலைமை ஆசிரியரை சந்தித்து வடிவமைப்பை காண்பித்து மாணவர்கள் ஒவர்கோட் தைக்க அறிவுறுத்த வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

23
மாணவிகளுக்கு சுடிதார் மேல் ஓவர்கோட் அணியும் நடைமுறை
Image Credit : x

மாணவிகளுக்கு சுடிதார் மேல் ஓவர்கோட் அணியும் நடைமுறை

புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை வழங்கப்பட்டு வருகிறது. இப்போது மாணவிகள் ஓவர்கோட் அணிய உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான துணியும் அரசே வழங்க உள்ளது. தமிழ்நாட்டில் மாணவிகளுக்கு சீருடை மேல் ஓவர்கேட் அணியும் நடைமுறை உள்ளது.

 2013ம் ஆண்டு புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவிகளுக்கு இந்த உடை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் மாணவர் அமைப்புகள் மற்றும் பெற்றோர் இதற்கு எதிர்ப்பு தெவித்ததால் இந்த முடிவு பின்வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Related image1
பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.! புதிய பாடத்தை அறிமுகம் செய்த தமிழக அரசு- என்ன தெரியுமா.?
Related image2
புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சலின் மர்ம மரணம்.! இது தான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்
33
மாணவிகளுக்கு பாதுகாப்பான உடை
Image Credit : GOOGLE

மாணவிகளுக்கு பாதுகாப்பான உடை

சுடிதார் மீது ஓவர் கோட் அணியும் முறை என்பது மாணவிகளுக்கு பாதுகாப்பான உடையாகக் கருதப்படுகிறது. நாடு முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இந்த உடை பரிந்துரைக்கப்படுகிறது. அரசு பள்ளிகள் மட்டுமின்றி பெரும்பாலான தனியார் பள்ளிகளும் மாணவிகள் சீருடை மேல் ஓவர்கேட் அணியும் நடைமுறையை ஏற்கெனவே கொண்டு வந்து விட்டன.

கல்வித்துறை முடிவுக்கு வரவேற்பு

இப்போது புதுச்சேரி கல்வித்துறை மாணவிகள் சுடிதார் மீது ஓவர் கோட் அணியும் நடைமுறையை கொண்டு வந்துள்ளது பல்வேறு தரப்பில் இருந்தும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சுடிதார் மேல் ஓவர்கோட் அணிவது மாணவிகளுக்கு மிகவும் பாதுகாப்பாக இருக்கும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
பள்ளி மாணவர்
பள்ளி
கல்வி

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved