MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சலின் மர்ம மரணம்.! இது தான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்

புதுச்சேரி மாடல் அழகி சான் ரேச்சலின் மர்ம மரணம்.! இது தான் காரணமா.? வெளியான ஷாக் தகவல்

கருப்பு நிற மாடலான சான் ரேச்சல், பல விருதுகளை வென்று மாடலிங் துறையில் சாதித்தவர். தூக்க  மாத்திரைகளை உட்கொண்டதால் மரணமடைந்தார். கடன் பிரச்சனையால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 Min read
Ajmal Khan
Published : Jul 14 2025, 10:34 AM IST| Updated : Jul 14 2025, 10:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
கருப்பழகி சங்கரபிரியா என்கிற சான் ரேச்சல்
Image Credit : instagram/san_rechal_official

கருப்பழகி சங்கரபிரியா என்கிற சான் ரேச்சல்

வெள்ளையாக இருந்தால் தான் அழகு என கூறி வருபவர்களுக்கு மத்தியில் தன்னுடைய கருப்பு நிறத்தை பாசிட்டிவாக மாற்றி உலக அளவில் பட்டம் வென்றவர் சங்கரபிரியா என்கிற சான் ரேச்சல் (வயது 24), இவர் பல்வேறு விளம்பர படங்களில் மாடலாக நடித்துள்ளார். தனியார் நிறுவனங்களின் அழகு சாதன பொருட்களுக்கு விளம்பர தூதராகவும் செயல்பட்டுள்ளார்.

 தினந்தோறும் புதுப்புது போட்டோ ஷூட்களை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துள்ளார். புதுச்சேரியை காராமணிகுப்பம் பகுதியை சேர்ந்தவர் தான் இந்த சான் ரேச்சல் (24) கடந்த ஆண்டு சத்யா என்பவரை திருமணம் செய்து கொண்டு புதுச்சேரியில் உள்ள 100 அடி சாலையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்,

24
அழகி போட்டி- பட்டங்களை குவித்த சான் ரேச்சல்
Image Credit : instagram/san_rechal_official

அழகி போட்டி- பட்டங்களை குவித்த சான் ரேச்சல்

கருப்பு நிறம் கொண்ட இவர் மாடலிங் துறையில் மிஸ் பெஸ்ட் ஆட்டிட்யூட் 2019, மிஸ் டார்க் குயின் தமிழ்நாடு 2019, மிஸ் புதுச்சேரி 2020, குயின் ஆப் சென்னை- 2023, 2023 MISS AFRICA GOLDEN INDIA போட்டியில் பங்கேற்று பல விருதுகளை பெற்றுள்ளார்.மேலும் இளம்பெண்களுக்கு மாடலிங் துறையில் சாதிப்பது தொடர்பான பயிற்சி மையத்தையும் நடத்தி வந்தார். 

இந்த சூழ்நிலையில் கடந்த ஜூன் மாதம் தனது வீட்டிற்கு வந்த சான் ரேச்சல் அங்கு அதிக அளவில் தூக்கம் மற்றும் இரத்த கொதிப்பு மாத்திரைகளை உட்கொண்டுள்ளார். இதனால் மயக்கமடைந்தவரை உடனடியாக அவரது சகோதரர் கொளதம் மற்றும் தந்தை காந்தி ஆகியோர் சான் ரேச்சலை புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

Related Articles

Related image1
நடுங்க வைக்கும் க்ரைம்! ஆந்திராவில் கொலை செய்து சென்னை கூவத்தில் உடல் வீச்சு! சிக்கிய முக்கிய கட்சி பிரமுகர்!
Related image2
healthy life tips: நீண்ட நாள் வாழ ஆசையா? அப்போ 40 வயதை தொடுவதற்கு முன் இந்த பழக்கங்களுக்கு "நோ" சொல்லுங்க
34
தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி
Image Credit : instagram/san_rechal_official

தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை முயற்சி

சில நாட்கள் மருத்துவமனையில் இருந்தவர் அங்கிருந்து புறப்பட்டவர் தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சென்ற அடுத்த நாட்களில் கை, கால்கள் வீக்கம் அடைந்து உடல் நிலை மோசம் அடைந்துள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்காக சான் ரேச்சல் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அங்கு அவரது உடல்நிலையை பரிசோதித்த மருத்துவர்கள் அதிகப்படியான மாத்திரைகளை சாப்பிட்டதால் சான் ரேச்சலுக்கு இரண்டு கிட்னியும் செயலிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைகாக ஜிப்மர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

44
சிகிச்சை பலனின்றி சான் ரேச்சல் உயிரிழப்பு
Image Credit : instagram/san_rechal_official

சிகிச்சை பலனின்றி சான் ரேச்சல் உயிரிழப்பு

இந்த சம்பவம் புதுச்சேரி பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீசார் வழக்கு பதிவு வசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தனது மரணத்திற்க்கு கணவரோ, மாமியாரோ காரணம் இல்லை என கடிதம் எழுதி வைத்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

பல்வேறு பேஷன் நிகழ்ச்சிகள் நடத்த ரேச்சல் கடன் பெற்றதாகவும் இதனால் கடன் நெருக்கடி அதிகரித்த நிலையில் தனது கணவரிடம் கூட கூறாமல் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சான் ரேச்சல் தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா.? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
காவல் நிலையம்
குற்றம்
மருத்துவமனை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved