MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Politics
  • விலகியது மர்மம்..! Cp ராதாகிருஷ்ணன் ஸ்டாலினை சந்தித்ததே ஆதரவு கேட்கத்தான்.. கிளீன் ஸ்கெட்ச்

விலகியது மர்மம்..! Cp ராதாகிருஷ்ணன் ஸ்டாலினை சந்தித்ததே ஆதரவு கேட்கத்தான்.. கிளீன் ஸ்கெட்ச்

 புதிய துணை குடியரசு தலைவர் தேர்தலில் பாஜக சார்பில் சி.பி. ராதாகிருஷ்ணன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. இதனால், காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளருக்கு ஆதரவளிப்பதா அல்லது தமிழரான சிபிஆருக்கு ஆதரவளிப்பதா என்ற தர்மசங்கடமான நிலை திமுகவுக்கு உருவாகியுள்ளது.

2 Min read
Ajmal Khan
Published : Aug 18 2025, 08:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
துணை குடியரசு தலைவர் வேட்பாளராக சிபிஆர்
Image Credit : X-@CPRGuv

துணை குடியரசு தலைவர் வேட்பாளராக சிபிஆர்

துணை குடியரசுத்தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய துணை குடியரசு தலைவரை தேர்ந்தெடுக்க ஆளுங்கட்சியான பாஜக தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. அந்த வகையில் தங்கள் அணி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெற வைக்க பல கட்ட ஆலோசனைகள் நடத்திய நிலையில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மூத்த தலைவரும், மஹாராஷ்டிரா ஆளுநருமான சிபி ராதாகிருஷ்ணன் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது.

சி.பி. ராதாகிருஷ்ணன் தனது 14-16 வயதில் இருந்தே ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாரதிய ஜன சங்கத்துடன் அரசியல் பயணத்தைத் தொடங்கினார். 1974 இல் ஜன சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

24
யார் இந்த சிபிஆர்
Image Credit : Getty

யார் இந்த சிபிஆர்

1998 மற்றும் 1999 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் கோவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2004 முதல் 2006 வரை தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராகப் பணியாற்றினார். 2004 இல் அதிமுக-பாஜக கூட்டணி உருவாக முக்கிய பங்காற்றினார். 2014 இல் கோயம்புத்தூர் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்டு 3,89,000 வாக்குகளுக்கு மேல் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். இருப்பினும், 2014 மற்றும் 2019 தேர்தல்களில் தோல்வியடைந்தார்.

சிபி ராதாகிஷ்ணன் பணியை பாராட்டிடும் வகையில் 2023 ஆண்டு ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் பொறுப்பு தேடி வந்தது. அடுத்ததாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநராக செயல்பட்டு வந்தவர் தற்போது 2024 ஜூலை 27 முதல் மகாராஷ்டிரா ஆளுநராகப் பணியாற்றி வருகிறார்.

Related Articles

Related image1
அரைவேக்காட்டு தனமா சொல்லாதீங்க.! சோற்றுக்குள் பூசணியை மறைக்கிறீங்களே அன்புமணி- வெளுத்து வாங்கும் எம்ஆர்கே
Related image2
சி.பி. ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளர்! பாஜக அதிரடி அறிவிப்பு!
34
ஆளுநர் டூ துணை குடியரசு தலைவர்
Image Credit : X-@narendramodi

ஆளுநர் டூ துணை குடியரசு தலைவர்

இந்த நிலையில் தான் துணை குடியரசு தலைவராக இருந்த ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவைத் தொடர்ந்து, புதிய துணை குடியரசு தலைவரை தேர்வு செய்யும் பணியை பாஜக அரசு மேற்கொண்டது. அதில் தங்கள் அணி சார்பில் யாரை நிறுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டதில் தமிழகத்தை சேர்ந்தவரை துணை குடியரசு தலைவராக நிறுத்தி திமுகவிற்கு செக் வைத்துள்ளது பாஜக,

எனவே குடியரசு துணை தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திமுகவின் நிலைப்பாடு என்ன என கேள்வி எழுந்துள்ளது. தற்போது திமுகவுக்கு தர்ம சங்கடமான நிலை உருவாகியுள்ளது. துணை ஜனாதிபதிக்கு தேர்தல் நடந்தால் காங் நிறுத்தும் தமிழரல்லாத வேட்பாளருக்கு ஆதரவாக திமுக வாக்களிக்குமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

44
ஸ்டாலினை சந்தித்த சிபிஆர்
Image Credit : our own

ஸ்டாலினை சந்தித்த சிபிஆர்

அல்லது தமிழரான சிபி ஆருக்கு வாக்களிக்குமா.? என அரசியல் விமர்சர்கள் ஆலோசிக்க தொடங்கியுள்ளனர். சிபிஆருக்கு ஆதரவாக வாக்களித்தால் காங்கிரசுக்கு எதிரான இண்டி கூட்டணிக்கு எதிரான நிலைப்பாட்டை திமுக எடுத்ததாக கருதப்படும். சிபிஆருக்கு ஆதரவாக வாக்களித்தால் பாஜகவும் - திமுகவும் கூட்டணி என எதிர்கட்சிகள் விமர்சிக்க தொடங்கிவிடும். 

மேலும் துணை ஜனாதிபதியாக தமிழர் வருவதை விரும்பாத திமுக என பெயரும் திமுகவிற்கு கிடைக்கும். இந்த நிலையில் சிபி ராதாகிருஷ்ணன் தமிழக முதலமைச்சரும்- திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினுக்கு நெருங்கிய தண்பராக உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட முதலமைச்சர் ஸ்டாலினை சிபி ராதாகிருஷண்ன நேரில் சென்று சந்தித்து உடல் நலம் விசாரித்துள்ளார். எனவே அப்போதே தான் துணை குடியரசு தலைவர் பதவிக்கான வேட்பாளாராக களத்தில் இறங்க இருப்பதாகவும் அதற்கு ஆதரவு தரும்படி கேட்டதாகவும் தகவல் கூறப்படுகிறது. எனவே திமுகவின் முடிவு என்ன என கேள்வியானது எழுந்துள்ளது.

About the Author

AK
Ajmal Khan
அஜ்மல்கான், பிரபல தொலைக்காட்சிகளில் மூத்த மற்றும் சிறப்பு செய்தியாளராக பணிபுரிந்துள்ளார். 20வருடங்களாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர், கடந்த 3 ஆண்டுகளாக ஏசியா நெட் இணையதளத்தில் தமிழ்நாடு மற்றும் அரசியல் சார்ந்த செய்திகளையும் எழுதி வருகிறார்.
தமிழ்நாடு
பிஜேபி
திமுக
அதிமுக பாஜக கூட்டணி
மோடி அரசு

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved