MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • Dark red henna: பெண்களே.! மருதாணி வைத்தவுடன் உங்கள் கைகள் செக்க சிவக்க ஆசையா..? இந்த குறிப்பு பின்பற்றுங்கள்.!

Dark red henna: பெண்களே.! மருதாணி வைத்தவுடன் உங்கள் கைகள் செக்க சிவக்க ஆசையா..? இந்த குறிப்பு பின்பற்றுங்கள்.!

Tips to Darken Mehndi Naturally: Dark red henna for hands: மருதாணி மீது தீராத காதல் கொண்ட பெண்கள் திருமணம் போன்ற விழா நாட்களில், தங்கள் கைகள் செக்க சிவக்க வேண்டும் என்று ஆசைப்படுவது வழக்கம். அதற்கான எளிய குறிப்பு இந்த பதிவின் மூலம் பார்க்கலாம்.

2 Min read
Anija Kannan
Published : Oct 06 2022, 12:47 PM IST| Updated : Oct 06 2022, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

மருதாணி மீது பெண்களுக்கு எப்போதும், மிகப்பெரிய காதல் இருக்கும். தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் திருமணம் போன்ற வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும் போது, பெண்கள் தன்னை அழகாக வைத்துக் கொள்வதிலும், அலங்கரித்துக் கொள்வதிலும் முழுக்கவனம் செலுத்துவது உண்டு. 


 மேலும் படிக்க..எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது...? மீறினால், வாஸ்துப்படி தீராத ஆரோக்கிய குறைபாடு வந்து சேருமாம்..

25

அதுமட்டுமின்று, திருமணத்திற்கு தயாராகும் மணப்பெண் நகை, ஆடை அலங்காரத்தைப் போன்று தங்கள் கை மற்றும் கால்களை மருதாணி மூலம் அழகுபடுத்துவதும் வழக்கம். அண்மைக்காலமாக திருமண நிச்சயதார்த்தம் போல் மணப்பெண்ணுக்கு மருதாணி இட்டு அழகு படுத்துவதும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

 மேலும் படிக்க..எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது...? மீறினால், வாஸ்துப்படி தீராத ஆரோக்கிய குறைபாடு வந்து சேருமாம்..

35

 

அதிலும், யாருடைய கையில் மருதாணி அதிகமாக சிவக்கிறது..? என்பதை வைத்து அவர்கள் விருப்பும் நபர் மீது எந்த அளவிற்கு அன்பு இருக்கும் என்பதையும் கண்டறியப்படுகிறது. முன்பெல்லாம் மருதாணி கைகளில் சிவப்பாக பிடிப்பதற்கு, இலைகளில் பாக்கு, சுண்ணாம்பு போன்ற பொருள்களை வைத்து அரைப்பது வழக்கம். இன்றைக்கு மருதாணி இலைகளுக்குப் பதில் மெஹந்தியைத் தான் அதிகளவில் பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.எனவே, எதுவாக இருந்தாலும், உங்கள் கைகள் சிவக்க இந்த குறிப்பு பின்பற்றி பாருங்கள். 

 

 

45

மருதாணி சிவப்பாக பிடிப்பதற்கான வழிமுறைகள்:

1. மருதாணி இட்டகைகளில், கிராம்பு போட்டு கொதிக்க வைத்த தண்ணீரில் ஆவிபிடிப்பது கைகளில் அடர்த்தியான சிவப்பு நிறம் கிடைக்கச் செய்யும்.

2. சர்க்கரை, எலுமிச்சை கலந்த தண்ணீரில்கைகளில் அடிக்கடி தெளிப்பது, நல்ல பலன் கிடைக்க வழிவகுக்கும். இதனால் விரைவில் காய்ந்துவிடாமல் நீண்ட நேரத்திற்கு உங்களது கைகளில் இருப்பதால், நல்ல சிவப்பு நிறத்தையும் நமக்கு வழங்குகிறது.


 மேலும் படிக்க..எந்த திசை நோக்கி அமர்ந்து சாப்பிட கூடாது...? மீறினால், வாஸ்துப்படி தீராத ஆரோக்கிய குறைபாடு வந்து சேருமாம்..

55

மருதாணி கைகளில் வைத்து குறைந்தபட்சம் ஒன்றரை மணிநேரமாவது அதை கலைக்காமல் அப்படியே வைத்திருக்க வேண்டும். ஒருநாள் முழுவதும் அதை மாற்றாமல் வைத்திருப்பது கூடுதல் நிறம் பெற காரணமாக இருக்கும்.

3. மருதாணி காய்ந்தபின் குறைந்தபட்சம் 6 மணி நேரம் வரை தண்ணீரில் கையை நனைக்காமல் இருப்பது நல்லது. இது மருதாணியின் நிறம் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்கச் செய்யும். 

4. மருதாணி இட்டவுடன் தூங்கச் சென்றால் நமது உடைகளில் எல்லாம் அது பட்டு, துணிகளில் கறை ஏற்படும். இதை தவிர்க்க மருதாணி இட்ட கைகளில் கையுறையை போட்டுக் கொள்ளலாம்.

5. நீங்கள் கைகளை கழுவும் போது, கடுகு எண்ணெய்யைக் கொண்டு நீக்கலாம். இல்லையென்றால், யூகலிப்டஸ் எண்ணெய்யையும் நீங்கள் உபயோகிக்கலாம்.

About the Author

AK
Anija Kannan

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved