MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Lifestyle
  • குழந்தைகளுக்கு பாலில் மருந்து.. தண்ணீருக்கு பதில் பாலுடன் மருந்து உட்கொள்வது சரியா? அறிவியல் என்ன சொல்கிறது..

குழந்தைகளுக்கு பாலில் மருந்து.. தண்ணீருக்கு பதில் பாலுடன் மருந்து உட்கொள்வது சரியா? அறிவியல் என்ன சொல்கிறது..

Taking medicine with milk is good or bad: பாலுடன் மருந்து எடுப்பது சரியான விஷயமா என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.  

1 Min read
Author : maria pani
| Updated : Feb 15 2023, 10:58 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

இந்தியாவை பொறுத்தவரை பெரும்பாலானோர் பாலுடன் மருந்து எடுத்து கொள்வதை பழக்கமாக வைத்திருக்கிறார்கள். சிலர் ஜூஸ், குளிர்பானங்களுடன் மருந்து எடுத்து கொள்கிறார்கள். குழந்தைகளுக்கும் மருந்தை பாலுடன் கொடுக்கிறார்கள். அப்படிச் செய்வது சரியா? எல்லா மருந்துகளையும் பாலுடன் சேர்த்து சாப்பிடலாமா? அது நல்லதா என்பதை இங்கு காணலாம். 

 


 

25

நாம் அன்றாடம் அருந்தும் பாலில் கால்சியம் அதிகமாக உள்ளது. கால்சியம் பல மருந்துகளின் ஆற்றலை குறைத்து விடுவதாகக் கூறப்படுகிறது. இங்கு எந்த மருந்துகளுடன் பால் அருந்தக் கூடாது என்பதை காணலாம். பாலுடன் மருந்து உட்கொள்வதை வயதானவர்கள் அதிகம் செய்கிறார்கள். குழந்தைகளுக்கும் அதை பழக்குகிறார்கள். பால் போன்ற பானங்களோடு மருந்து உட்கொள்ளும்போது மருந்தின் வினையாற்றும் விளைவைக் குறைக்கும் என ஜெர்மன் மருந்தாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் உர்சுலா செலர்பெர்க் கூறியுள்ளார். 

 

35

பாலில் உள்ள கால்சியம், நம் இரத்தத்தில் மருந்து கலப்பதைத் தடுக்கிறது. அதனால் மருந்தின் உட்கொள்வதிம் தாக்கம் குறையும். ஆகவே பெரும்பாலான மருத்துவர்கள் பாலுடன் மருந்து உட்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார்கள். 

45

பாலுடன் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது. ஒருவேளை நீங்கள் ஆண்டிபயாடிக் மருந்துகளை எடுத்துக் கொண்டால், மறந்தும் பாலுடன் எடுத்துக் கொள்ளாதீர்கள். இதனால் மருந்தின் விளைவு குறையும். பல சமயங்களில் இது உங்கள் வயிற்றில் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.  

இதையும் படிங்க: சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடுவது நல்லதா? கட்டுக்கதையும் உண்மையும்!

 

55

பழச்சாறுடன் மருந்தை எடுத்து கொண்டால் உங்களுக்கு சுத்தமாக பயனளிக்காது. ஜெர்மன் மருந்தாளர் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் உர்சுலா செலர்பெர்க், பழச்சாறு நம் உடலைச் சென்றடைந்தவுடன், அது மருந்தை உடலில் கரைக்க உதவும் என்சைம்களைத் தடுக்கிறது. இதனால் மருந்தின் வேலை செய்வது குறையும். அதனால்தான் மருந்து உட்கொள்ளும் போதெல்லாம் ஒரு டம்ளர் தண்ணீருடன் மட்டுமே எடுக்க வேண்டும். பால், ஜூஸ் ஆகியவற்றுடன் உட்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். 

இதையும் படிங்க: திடீர்னு லோ சுகர் ஆச்சுன்னா என்ன செய்யணும்.. சாக்லேட் சாப்பிட்டால் நல்லதா?

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

About the Author

MP
maria pani
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Recommended image1
10 மகள்கள் இருந்தும் ஆண் வாரிசு இல்ல.. உயிருக்கே ஆபத்தான 11வது பிரவசம்..!
Recommended image2
Tomato Face Packs : சரும அழுக்கை நீக்கி 'முகத்தை' பளீச்னு மாத்தும் 'தக்காளி' பேஸ்பேக்!
Recommended image3
இதய நோய் ஆபத்தை தடுக்கும் '7' உணவுகள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved