- Home
- Lifestyle
- Fragrant Flowers: தூக்கமே வரலையா? இந்த 5 வாசனை பூச்செடிகளை வீட்ல வைங்க, நிம்மதியா தூங்கலாம்!
Fragrant Flowers: தூக்கமே வரலையா? இந்த 5 வாசனை பூச்செடிகளை வீட்ல வைங்க, நிம்மதியா தூங்கலாம்!
Plants that put you to sleep instantly : தூக்கம் வராமல் கஷ்டப்படுகிறீர்களா? லேவண்டர், மல்லிகை, சம்பங்கி போன்ற, பராமரிக்க சுலபமான 5 வாசனைப் பூச்செடிகளை வீட்டில் வளர்க்கலாம். இவை மனதை ரிலாக்ஸ் செய்து, உங்களுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கும்.

லேவண்டர் (Lavender)
சம்பங்கி (Tuberose)
வெள்ளை நிற சம்பங்கி பூக்களின் வாசனை மிகவும் வலுவாகவும் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். இந்த செடி இரவில் அதிக நறுமணத்தை வெளிப்படுத்தும். இது உங்கள் மனநிலையை ரிலாக்ஸ் செய்வதோடு, தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. இந்த செடிக்கு நீங்கள் அதிக தண்ணீர் ஊற்றத் தேவையில்லை, ஆனால் நிறைய பூக்கள் பூக்கும்.
மல்லிகை (Jasmine)
மல்லிகைப் பூவின் வாசனை மனதை அமைதிப்படுத்தும் வேலையைச் செய்கிறது. உங்கள் தூக்கத்தின் தரம் சரியாக இல்லை என்றால், உங்கள் பால்கனியிலோ அல்லது வீட்டுத் தோட்டத்திலோ ஒரு மல்லிகைச் செடியை நிச்சயம் நடுங்கள். இதற்கு குறைந்த நீரே தேவைப்படும், சிறிய கவனிப்பிலேயே நிறைய பூக்கள் கிடைக்கும். இந்த பூக்களை சாமிக்கு வைப்பதில் இருந்து தலையில் சூடுவது வரை பயன்படுத்தலாம்.
சீன மல்லி (Gardenia)
சீன மல்லி வெள்ளைப் பூக்களின் நறுமணம் வீடு முழுவதும் பரவி நிற்கும். இதை ஒரு தொட்டியில் எளிதாக வளர்க்கலாம். மனப் பதற்றத்தைக் குறைத்து மனதை அமைதியாக வைத்திருக்க, இந்த குறைந்த பராமரிப்பு செடியை உங்கள் பால்கனியில் வளர்த்து, கோடையில் ரிலாக்ஸாக உணருங்கள்.
இருவாட்சி (Mogra)
இந்திய வீடுகளில் வாசனைக்காக இருவாட்சி செடி அதிகம் விரும்பப்படுகிறது. இதன் இயற்கையான, மனதை ஆசுவாசப்படுத்தும் நறுமணம் ஆரோக்கியத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்துகிறது. கோடை காலத்தில் கூட இந்த செடிக்கு குறைந்த தண்ணீரே தேவைப்படும். எனவே, குறைந்த பராமரிப்பில் ஒரு வாசனைச் செடியை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இருவாட்சி ஒரு சூப்பர் சாய்ஸ்.
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

