Relationship: பொது இடத்தில் உடலுறவு வைத்து கொண்ட தம்பதியினர்...ஷாக்கான பொது மக்கள், கைது செய்த காவல்துறை..
Relationship Tips: இன்றைய கால கட்டத்தில் உடல் ரீதியான நெருக்கத்துடன் தம்பதிகள் பயணம் செய்வது மிகவும் பொதுவான நிகழ்வாகிவிட்டது. இதனை மிஞ்சும் வகையில், சமீபத்தில் ஒரு நிகழ்வு அரங்கேறியுள்ளது.
Relationship Tips
உலகின் எங்கோ ஒருமூலையில் விசித்திரமான செயல் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நேரம் அது நகைச்சுவையாகவும், வேடிக்கையாகவும் இருக்கும். சில நேரம் அது அதிர்ச்சி தரக்கூடிய நிகழ்வாகவும் இருக்கும். அந்த நிகழ்வுகள் அனைத்து இணையதளம் மூலம் நம்மிடம் வந்து சேர்க்கிறது.
Relationship Tips
அப்படியான ஒரு நிகழ்வு பிரிட்டன் நாட்டின் லிவர்பூல் பகுதியில் அரங்கேறியுள்ளது. ஆம், 2022 கடந்த ஆகஸ்ட் மாதம் 1000 நபர்களுக்கு மேல் இருக்கும் ஒரு பொது இடத்தில் தம்பதியரின் செக்ஸ் வைத்து கொண்ட வீடியோ ஒன்று பொது மக்களை கோபப்படுத்தியுள்ளது. இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இது தொடர்பாக அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்து வந்தனர்.
Relationship Tips
இதையடுத்து, அந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வீடியோவில் இருக்கும் காதலர்கள் இருவரையும் சிறையில் அடைத்துள்ளனர். இவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்தி பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறி வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Relationship Tips
முதலில் அந்த வீடியோவில் இருந்த பெண் கெலி கசின்ஸ்(35) என்பவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் அளித்த தகவலின் படி அந்த வீடியோவில் இருந்த ஜோ ஃபிர்பி(23) என்ற நபரை பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை மீண்டும் நேற்று செப்டம்பர் 20ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதையடுத்து, 35 வயதான கெல்லி கசின்ஸ் நீதிமன்றத்தின் முன் தனது குற்றத்தை ஒப்பு கொண்டார். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, கெல்லிக்கு அடுத்த மாதம் தண்டனை வழங்கப்பட இருக்கிறது.
Relationship Tips
இந்தச் சம்பவம் தொடர்பாக லிவர்பூல் நகர் மேயர் ஜோயன் ஆண்டர்சன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோபமாக பதில் அளித்திருந்தார். அதில் அவர், ''பொது இடங்களில் அநாகரீகமான நடத்தை ஏற்றுக்கொள்ள முடியாதது. அதுவும் எனது நகரத்தில் இத்தகைய ஆபாச செயல்பாடு நடந்தது இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது. இது தொடர்பாக நான் காவல்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தியுள்ளேன்” எனப் பதிவிட்டிருந்தார்.