இப்படியெல்லாம் செய்தால் சிலிண்டர் காலி: அப்புறம் சோத்துக்கு திண்டாட்டம் தான்!
நாளுக்கு நாள் விலை கூடிக்கொண்டே வரும் சிலிண்டரை எப்படி சிக்கமான பயன்படுத்துவது என்பது குறித்து இந்தப் பதிவில் காண்போம்.

சிலிண்டர்
அன்றாட வாழ்க்கையில் சிலிண்டர் முக்கியமான ஒன்றாகிவிட்டது. கிராம வாசிகளுக்கு கூட விறகு அடுப்பு இருக்கும். ஆனால், நகரங்களில் வசிக்கும் மக்களுக்கு சிலிண்டர் இல்லையென்றால் அவர்களது வாழ்க்கையை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நாளுக்கு நாள் கேஸ் விலை எகிறிக் கொண்டே இருக்கும். அப்படியிருக்கும் சூழலில் கேஸ் சிலிண்டரை சிக்கமாக பயன்படுத்த வேண்டும். அதற்காக சமைக்கவே கூடாது என்று சொல்லவில்லை. மாறாக, எப்படி சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று தான் சொல்ல வருகிறோம்...
பர்னர்:
கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் எப்போதும் அழுக்குகள் படியாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அழுக்குகள் இருந்தால் அடைப்பு ஏற்பட்டு பிரச்சனை ஏற்படும். கேஸ் லீக் ஆகும் வாய்ப்பு கூட உண்டாகும். இதனால், சிலிண்டர் சீக்கிரமாக கூட தீர்ந்துவிடும். அதனால், பர்னர் எப்போதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.
ஈரமான பாத்திரத்தை பயன்படுத்த கூடாது:
சிலர் காலையில் அவசர அவசரமாக சமைக்க வேண்டும் என்று ஈரமான பாத்திரங்களைக் கொண்டு சமையல் செய்வார்கள். முதல் நாள் இரவு ஜிங்கில் போட்ட பாத்திரத்தை மறுநாள் காலையில் அவசர அவசரமாக கிளீன் செய்து, அதனை அப்படியே சமையலுக்கு பயன்படுத்துவீங்க. எப்படியும் இந்த ஈரமான பாத்திரம் காய்வதற்கு 2 முதல் 4 நிமிடங்கள் வரை ஆகலாம். ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாயில்லை. ஒவ்வொரு நாளும் இது போன்று இருந்தால் உங்களது சிலிண்டர் தான் காலியாகும்.
மூடி வைக்க வேண்டும்:
சமைக்கும் போது எது சமைத்தாலும், அதனை மூடி வைத்து சமைக்க வேண்டும். காய்கறிகள் சமைப்பதாக இருந்தாலும் சரி, அரிசியாக இருந்தாலும் மூடி வைத்து சமைத்தால் சீக்கிரமாகவே வெந்துவிடும். குக்கர் கூட பயன்படுத்தலாம்.
பிரிட்ஜில் இருந்து எடுத்து உடனே பயன்படுத்த கூடாது:
சமையலுக்கு தேவையான பொருட்கள் பிரிட்ஜில் இருந்தால் முதலில் அதனை எடுத்து வெளியில் வைக்க வேண்டும். அதிலுள்ள குளிர்ச்சி முற்றிலும் போன பிறகு சமைக்க பயன்படுத்தலாம். அப்படியே குளிர்ச்சியாகவே பயன்படுத்தினால் சீக்கிரம் வேகாது. அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதனால் கேஸ் தான் வீணாகும்.
ஊற வைக்க வேண்டும்:
சமைப்பதற்கு முன்னதாக அரிசி, பருப்பு, பயறு வகைகளை ஊற வைக்க வேண்டும். அப்படி ஊற வைத்து சமைத்தால் வெகு சீக்கிரமாகவே எல்லாமே வெந்துவிடும். இதன் மூலமாக சிலிண்டர் மிச்சமாகும்
தட்டையான பாத்திரம்:
கேஸ் சமமாக பரவக் கூடிய வகையில் தட்டையான பாத்திரத்தை பயன்படுத்தினால் சமைக்க வேண்டிய பொருட்கள் எளிதில் சீக்கிரமாக வெந்துவிடும். ஆக உங்கள் கேஸ் மிச்சமாகும். அதாவது குழியாக உள்ள பாத்திரம் என்றால் அடிப்பாகம் மட்டும் எரியும். இதுவே தட்டையான பாத்திரமாக இருந்தால் கேஸ் சமமாக பாத்திரத்தின் எல்லா பகுதிகளுக்கும் பரவும்.