Vada Curry Recipe : ஹோட்டல் சுவையில் அட்டகாசமான வடகறி செய்வது எப்படி?
Vada Curry Recipe : ஹோட்டல்ல சாப்பிட்ட அதே டேஸ்ட்ல வீட்டுலயும் வடகறி செஞ்சு சாப்பிட ஆசையா? வாங்க எப்படி சுவையான வடகறி செய்யுறதுன்னு பாப்போம். இனிமே ஹோட்டலுக்கு போக மாட்டீங்க!

தேவையான பொருட்கள்
வடை தயாரிக்க:
• கடலைப்பருப்பு - 1 கப்
• வரமிளகாய் - 3 முதல் 4
• சோம்பு - 1 டீஸ்பூன்
• உப்பு - தேவையான அளவு
தாளிப்பு மற்றும் கிரேவிக்கு:
• நல்லெண்ணெய் - 2 டீஸ்பூன்
• பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை - தாளிக்கத் தேவையான அளவு
• பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
• தக்காளி - 1 (மசித்தது அல்லது அரைத்தது)
• இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
• மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
• தனியா தூள் - 1 டீஸ்பூன்
• மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
• தேங்காய் - அரை கப் (சிறிது முந்திரி சேர்த்து அரைத்தது)
• மல்லித்தழை - அலங்கரிக்க
Panipuri Recipe : மொறுமொறுப்பான பானி பூரி: வீட்டிலேயே சுவையாக செய்வது எப்படி?
செய்முறை விளக்கம்
1)வடை தயாரித்தல்: முதலில் கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் நன்றாக ஊறவைக்கவும். பின் அதனுடன் வரமிளகாய், சோம்பு மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் விடாமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
இந்த மாவை இட்லித் தட்டில் ஆவியில் வேகவைத்து எடுத்துக்கொள்ளலாம் (இது ஆரோக்கியமானது). அல்லது, சிறு சிறு வடைகளாகத் தட்டி எண்ணெயில் பொரித்தும் எடுத்துக்கொள்ளலாம். வெந்த வடைகளை சிறிய துண்டுகளாக உதிர்த்து வைத்துக்கொள்ளவும்.
2)மசாலா தயாரித்தல்: அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றவும். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை சேர்த்து தாளிக்கவும். பின் பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். இதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
3)கிரேவி: செய்தல் வெங்காயம் வதங்கியதும், மசித்து வைத்துள்ள தக்காளியைச் சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்து மஞ்சள் தூள், தனியா தூள், மிளகாய் தூள் சேர்த்து கிளறவும். சிறிது தண்ணீர் ஊற்றி மசாலா பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும்.
4)இறுதி கட்டம்: இப்போது உதிர்த்து வைத்துள்ள வடைகளைச் சேர்த்து, 5 நிமிடங்கள் மிதமான தீயில் கொதிக்க விடவும். கடைசியாக முந்திரி சேர்த்து அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் மல்லித்தழை தூவி இறக்கவும்.
இப்போது மணமணக்கும், சுவையான "ஹோட்டல் ஸ்டைல் வடகறி" தயார்! இதை இட்லி, தோசை அல்லது பூரியுடன் பரிமாறினால் சுவை பிரமாதமாக இருக்கும்.
குறிப்பு: வடைக்கு அரைக்கும்போது தண்ணீர் அதிகமாகிவிடாமல் கவனமாக அரைக்கவும். அப்பொழுதுதான் வடகறி குழையாமல் சுவையாக இருக்கும்.
Hotel Style Sambar : ஹோட்டல் ஸ்டைல்ல சாம்பார் டேஸ்ட்டா வேணுமா? இந்த ட்ரிக்கை மட்டும் பண்ணுங்க!
ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

