ஐபிஎல் 2020: கேகேஆர் அணியின் கேப்டன் அதிரடி மாற்றம்.. கேப்டன்சியிலிருந்து திடீரென விலகிய தினேஷ் கார்த்திக்
கேகேஆர் அணியின் கேப்டன்சி பொறுப்பை இயன் மோர்கனுக்கு விட்டுக்கொடுப்பதாக கூறி கேப்டன்சியிலிருந்து விலகியுள்ளார் தினேஷ் கார்த்திக்.
ஐபிஎல் 13வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், கேகேஆர் இதுவரை ஆடிய 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் 4ம் இடத்தில் உள்ளது.
இந்த சீசனில் கேகேஆர் அணி, உலக கோப்பை வின்னிங் கேப்டன் இயன் மோர்கனை அணியில் எடுத்ததுமே, சீசனின் பாதியில் தினேஷ் கார்த்திக்கிடமிருந்து கேப்டன்சி மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
சீசனின் இடையிலேயே கேகேஆர் அணியின் கேப்டன்சி இயன் மோர்கனிடம் ஒப்படைக்கப்பட வாய்ப்புள்ளது என்று கவாஸ்கர் தெரிவித்திருந்தார்.
அணியை முன்னின்று வழிநடத்துபவரே கேப்டனாக இருக்க வேண்டும். அந்தவகையில், கேகேஆர் அணியின் கேப்டன் பதவிக்கு இயன் மோர்கன் தான் தகுதியான நபர் என்று ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்போது கேப்டன்சியை இயன் மோர்கனுக்கு விட்டுக்கொடுத்துள்ளார் தினேஷ் கார்த்திக்.
கேகேஆர் அணியின் கேப்டன் மாற்றப்பட வாய்ப்புள்ளது என்பது, இயன் மோர்கனை இந்த சீசனுக்கான ஏலத்தில் கேகேஆர் அணி எடுத்தபோதே தெரிந்துவிட்டது. உடனே மாற்றினால், நல்லா இருக்காது என்பதா தாமதிக்கப்பட்டிருக்கலாம்.
பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தும் விதமாக கேகேஆர் அணியின் கேப்டன்சி பொறுப்பிலிருந்து விலகுவதாகவும் இயன் மோர்கனை கேப்டனாக நியமிக்கும்படியும் கேகேஆர் அணி நிர்வாகத்திடம் தெரிவித்துவிட்டார்.
Half-way through the IPL season, Kolkata Knight Riders skipper Dinesh Karthik has handed over captaincy to Eoin Morgan to focus more on his batting.