ஐபிஎல் 2020: கேகேஆர் தான் ஜெயிக்கும்னு காரணத்துடன் சொன்னாரு.. கடைசியில அவரு சொன்ன மாதிரியே நடந்துருச்சே
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கேகேஆர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் கேகேஆர் அணி தான் ஜெயிக்கும் என காரணத்துடன் ஆகாஷ் சோப்ரா கூறியிருந்த நிலையில், அதேபோலவே நடந்தது.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று நடந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸும் கேகேஆரும் மோதின.
இந்த போட்டிக்கு முன்பாக, இந்த போட்டி குறித்தும், இரு அணிகள் குறித்தும் அலசிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா அலசியிருந்தார்.
அப்போது, ராஜஸ்தான் அணியின் டாப் ஆர்டர் பட்லர், ஸ்மித், சஞ்சு சாம்சன் என வலுவாக இருந்தாலும், மிடில் ஆர்டர் ராபின் உத்தப்பா, ரியான் பராக், டெவாட்டியா என பலவீனமாக உள்ளது. எனவே இந்த போட்டியில் கேகேஆர் அணி தான் வெற்றி பெறும் என தெரிவித்திருந்தார்.
அதேபோலவே, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மிடில் ஆர்டர் பலவீனம் கேகேஆருக்கு எதிரான போட்டியில் வெளிப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்ற முதல் 2 போட்டிகளிலுமே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக சஞ்சு சாம்சனும், ஸ்மித்தும் சிறப்பாக ஆடியிருந்தனர்.
ஆனால் கேகேஆருக்கு எதிராக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பட்லர், ஸ்மித், சாம்சன் சொதப்ப, மிடில் ஆர்டர் பலவீனம் அம்பலப்பட்டு, 175 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 137 ரன்கள் மட்டுமே அடித்து 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.