ஓயாமல் லவ் டார்ச்சர்.. கதறிய பெண் ஆசிரியை.. விடாத பள்ளி மாணவன்.. இறுதியில் நடந்தது என்ன?
உத்தரபிரதேசத்தில், காதலை ஏற்க மறுத்த ஆசிரியைக்கு 12ம் வகுப்பு மாணவன் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளான். நடுரோட்டில் ஆசிரியையின் உதட்டை பள்ளி மாணவன் கடித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி மாவட்டம் ஆக்ரா பகுதியில் உள்ள தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பெண் ஆசிரியர் ஒருவர் பணியாற்றி வந்துள்ளார். அதே பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவர் ஆசிரியரிடம் பழகி வந்துள்ளார். இதனை சாதாரணமாக எடுத்துக்கொண்ட ஆசிரியையும் மற்ற மாணவர்களிடம் பேசுவதை போல் பேசி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென பள்ளி மாணவன் ஆசிரியை காதலிப்பதாக கூறியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியை கேட்டு அதிர்ச்சி அடைந்தார். ஆசிரியை மாணவனுக்கு இதெல்லாம் தப்பு என்று அறிவுரை வழங்கியுள்ளார். ஆனால் அதை கேட்கும் மனநிலையில் பள்ளி மாணவன் இல்லை. ஆசிரியை காதலிப்பதாக கூறி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை மாணவனின் பெற்றோரரை நேரில் வரவழைத்து நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனையடுத்து மகனை தாய் கண்டித்துள்ளார்.
அப்படி இருந்த போதிலும் பள்ளி மாணவன் திருந்தவில்லை. ஆசிரியர்களுக்கு ஓயாமல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அந்த ஆசிரியை வேலையை விட்டு சென்றுள்ளார். பின்னர் அதே பகுதியில் உள்ள மற்றொரு பள்ளியில் ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட அந்த பள்ளி மாணவன் அங்கும் சென்று ஆசிரியைக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தெருவில் நடந்து சென்ற போது ஆசிரியரை பின்தொடர்ந்த மாணவன் வலுக்கட்டாயமாக அவரை தனியாக இழுத்து சென்று அவரது உதடுகளை கடித்தது மட்டுமல்லாமல் கூர்மையான ஆயுதங்களால் தாக்கி கழுத்தில் காயத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து காயமடைந்த அப்பெண்ணை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவனை தேடி வருகின்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகளும் வைரலாகி வருகிறது.

