MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • அடிப்பாவி! இவ தாயா? இல்ல பேயா! க...காதலனுக்காக பெற்ற மகளையே துடிக்க துடிக்க முடித்த கொடூரம்!

அடிப்பாவி! இவ தாயா? இல்ல பேயா! க...காதலனுக்காக பெற்ற மகளையே துடிக்க துடிக்க முடித்த கொடூரம்!

உல்லாசத்துக்கு இடையூறாக இருந்ததால் 3 வயது குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து தாய் கொன்று புதைத்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் இருவரும் கைது.

2 Min read
vinoth kumar
Published : Sep 15 2025, 12:53 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு
Image Credit : Google

தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு

தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் கள்ளக்காதலுக்காக கணவன் அல்லது குழந்தைகளை கொலை செய்யும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கள்ளக்காதலுடன் சேர்ந்து தாய் கொன்று புதைத்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் மெதக் மாவட்டத்தை சேர்ந்தவர் பாஸ்கர் (33). இவரது மனைவி மம்தா (26). இந்த தம்பதிக்கு 4 வயதில் மகனும், 3 வயதில் தனுஸ்ரீ என்ற மகளும் இருந்தனர். இந்நிலையில் இந்த தம்பதிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

24
கள்ளக்காதல்
Image Credit : Google

கள்ளக்காதல்

இதனால் கோபித்து கொண்டு தனது குழந்தைகளுடன் சப்ஷாபள்ளியில் உள்ள தாய் வீட்டிற்கு வந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த பயாஸ் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன் மம்தா, தனது மகனை பெற்றோரிடம் விட்டுவிட்டு மகள் தனுஸ்ரீயை அழைத்துக்கொண்டு, கள்ளக்காதலுடன் வீட்டை விட்டு வெளியேறினார். இதனை எப்படியோ இந்த விஷயத்தை அறிந்த கணவர் கடந்த மாதம் 27ம் தேதி சிவம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

Related Articles

Related image1
அசுர வேகத்தில் வந்த BMW கார்! சினிமா பாணியில் தூக்கி வீசப்பட்ட மத்திய நிதியமைச்சக அதிகாரி பலி! மனைவியின் நிலை?
Related image2
அடச்சீ! இப்படியும் ஒரு அப்பனா! சொல்லும் போதே நாக்கு கூசுது! அதுவும் பெத்த மகளையே..!
34
 போலீஸ் விசாரணை
Image Credit : our own

போலீஸ் விசாரணை

இந்த புகாரை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது அவர்கள் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு சென்று இருவரையும் மடக்கி பிடித்தனர். ஆனால் குழந்தை தனுஸ்ரீ மட்டும் காணவில்லை. இதுதொடர்பாக குழந்தையின் தாய் மம்தாவிடம் போலீசார் பாணியில் கிடுக்குப்பிடி விசாரணை மேற்கொண்டதில் அதிர்ச்சி தகவல் வெளியானது.

44
தாய் கைது
Image Credit : Google

தாய் கைது

அதாவது உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த தனுஸ்ரீயை இருவரும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்று, குழி தோண்டி புதைத்தது தெரிய வந்தது. இதையடுத்து குழந்தையை புதைத்த இடத்தை மம்தா காண்பித்ததை அடுத்து சடலத்தை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் மம்தா மற்றும் பயாஸ் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு பெற்ற குழந்தையை தாயே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
குற்றம்
இந்தியா
கொலை
காவல்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved