MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • ஒரே ஆண்டில் 5வது முறை நிரம்பிய மேட்டூர் அணை! வெள்ள அபாய எச்சரிக்கை... விவசாயிகள் மகிழ்ச்சி!

ஒரே ஆண்டில் 5வது முறை நிரம்பிய மேட்டூர் அணை! வெள்ள அபாய எச்சரிக்கை... விவசாயிகள் மகிழ்ச்சி!

கனமழையால் கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பி மேட்டூர் அணை 5வது முறையாக நிரம்பியுள்ளது. நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 Min read
SG Balan
Published : Aug 20 2025, 08:28 PM IST| Updated : Aug 20 2025, 08:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
5வது முறை நிரம்பிய மேட்டூர் அணை
Image Credit : our own

5வது முறை நிரம்பிய மேட்டூர் அணை

கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழையால், அங்குள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பின. இதன் விளைவாக, அந்த அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட உபரி நீர் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால், மேட்டூர் அணை இந்த ஆண்டில் 5-வது முறையாக அதன் முழு கொள்ளளவான 120.9 அடியை எட்டியுள்ளது.

23
நீர் திறப்பு அதிகரிப்பு
Image Credit : our own

நீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ள நிலையில், அணையின் பாதுகாப்பு கருதி, நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு விநாடிக்கு 1,16,683 கன அடியாக உள்ளது. அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 90,000 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

அணையில் இருந்து அதிகப்படியான நீர் திறக்கப்பட்டுள்ளதால், சேலம், ஈரோடு, நாமக்கல் உட்பட காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Related image1
மேட்டூர் அணை 68 ஆண்டுகளுக்குப் பிறகு நிரம்பியது! விவசாயிகள் மகிழ்ச்சி!
Related image2
12 மாவட்ட விவசாயிகளின் அட்ஷய பாத்திரம் மேட்டூர்.! அணை கட்டப்பட்டது எப்படி தெரியுமா?
33
பாதுகாப்பு எச்சரிக்கை
Image Credit : our own

பாதுகாப்பு எச்சரிக்கை

நீர் வரத்து அதிகரித்துள்ளதால், காவிரி ஆற்றில் குளிப்பதையோ, துணி துவைப்பதையோ தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆற்றின் நீர் வேகமாக பாயும் என்பதால், பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீர், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், கடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களின் விவசாயத்திற்கு இந்த நீர் வரத்து பெரும் உதவியாக இருக்கும்.

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
தமிழ்நாடு
சேலம்
வெள்ளம்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved