MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • இந்தியா
  • விட்டா ரொம்ப ஒவரா போற! கடுப்பான தந்தை! மகளை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி!

விட்டா ரொம்ப ஒவரா போற! கடுப்பான தந்தை! மகளை கட்சியில் இருந்து நீக்கி அதிரடி!

தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா, பிஆர்எஸ் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

1 Min read
vinoth kumar
Published : Sep 02 2025, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Image Credit : Asianet News

ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலம் உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் சந்திரசேகரராவ். பின்னர் 2001ம் ஆண்டு தெலுங்கானா ராஷ்ட்ர சமிதி என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 2014 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக சந்திரசேகரராவ் பதவியேற்றுக்கொண்டார். 2023 வரை பதவியில் நீடித்தார். இதனையடுத்து தேசிய அரசியல் அவரது நாட்டம் திரும்பியதால் கட்சியின் பெயரை பாரத் ராஷ்ட்ர சமிதி என பெயர் மாற்றினார்.

24
Image Credit : our own

அதன்பிறகு தெலுங்கானாவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் சந்திரசேகரராவின் பிஆர்எஸ் கட்சி தோல்வியடைந்தது. இந்நிலையில் பிஆர்எஸ் கட்சியில் உட்கட்சி பூசல் வெடித்தது. இதனால் சந்திரசேகர ராவ் - அவரது மகள் கவிதா இடையே மோதல் வெடித்தது. அதுமட்டுமல்லாமல் சகோதரர் ராமாராவுடனும் மோதல் போக்கை கடைப்பிடித்து வந்தார்.

Related Articles

Related image1
ரொம்ப அசிங்கமா இருக்கு! கோர்ட்டில் கதறிய மிளகாய் பொடி வெங்கடேசன்! நடந்தது என்ன?
Related image2
10ம் வகுப்பு மாணவர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு! நாளை காலை 10 மணி முதல்!
34
Image Credit : Getty

இதனிடையே காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். இந்த முறைகேட்டில் தனது தந்தை சந்திரசேகரராவுக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும் சந்தோஷ் ராவ் மற்றும் ஹரிஷ் ராவுமே இதற்கு காரணம் என்று கவிதா குற்றம்சாட்டி இருந்தார்.

44
Image Credit : twitter

இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாக கூறி செயல்பட்டதாக கூறி கவிதாவை பிஆர்எஸ் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும் கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிக்கையானது பிஆர்எஸ் பொதுச் செயலாளர் டி. ரவீந்தர் ராவ் மற்றும் கட்சி ஒழுங்கு நடவடிக்கைக் குழு பொறுப்பாளர் சோமா பாரத் குமார் பெயரில் வெளியாகியுள்ளது. பிஆர்எஸ்ஸில் இருந்து நீக்கம் செய்யப்ப கவிதா விரைவில் பத்திரிகையாளரை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அரசியல்
இந்தியா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved