- Home
- உடல்நலம்
- Heart Attack : இந்த '1' பழக்கம் போதும்! ஆய்சுக்கும் உங்களுக்கு மாரடைப்பு வராது- நம்புங்க நெசம்தான்
Heart Attack : இந்த '1' பழக்கம் போதும்! ஆய்சுக்கும் உங்களுக்கு மாரடைப்பு வராது- நம்புங்க நெசம்தான்
Post-Meal Routine For Heart Health : ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னும் 15 நிமிடங்கள் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை 40% குறைக்க முடியும்.

இன்றைய காலகட்டத்தில் மாரடைப்பு இளையோருக்கும் ஏற்படுகிறது. இதற்கு உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை மாற்றம், போதுமான தூக்கமின்மை, உடல் பருமன் என பல காரணங்கள் இருக்கின்றன. ஆனால் அன்றாட பழக்கங்களில் சிறிய மாற்றங்களை செய்யும்போது இதய ஆரோக்கியத்தை நன்றாக பராமரிக்க முடியும். குறிப்பாக தினமும் ஒவ்வொரு வேளை உணவுக்குப் பின்னும் 15 நிமிடங்கள் இந்தப் பழக்கத்தைப் பின்பற்றினால் மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை 40% குறைக்க முடியும். அது எப்படி என இங்கு காணலாம்.
நாம் ஒவ்வொரு வேளை உணவு சாப்பிடும் போதும், இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கிறது. பொதுவாக நாம் எடுத்துக் கொள்ளும் உணவை குளுக்கோஸாக உடைத்து, அதனை ஆற்றலாக செல்கள் பயன்படுத்துகிறது. ஆனால் இரத்த சர்க்கரை மிக அதிகமானால் தமனிகளில் வீக்கம், ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் ஏற்படுத்தும். இதனால் இரத்த நாளங்களின் வெளியடுக்கு சேதமாகி இதய நோய்களில் ஆபத்து அதிகரிக்கிறது.
இதை அறியாத மக்கள் உணவுப்பழக்கத்தில் கவனக் குறைவாக இருக்கின்றனர். சர்க்கரை உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், கார்போஹைட்ரேட்டுகள் போன்றவை அதிகம் எடுத்து கொள்கிறார்கள். இதனால் இரத்த சர்க்கரை உடனடியாக அதிகரித்து, தமனிகளில் வீக்கத்தைத் தூண்டிவிடுகிறது. அதாவது ஒரு இரும்பு குழாயில் துருப்பிடிப்பது மாதிரி நாளடைவில், இரத்த நாளங்களை சேதமடைகின்றன. இதனால் அவை அடைத்துக் கொள்கின்றன. இவை நீண்டகாலம் பாதிப்பை வெளிப்படுத்தாமல் இதய நோய்களின் அபாயத்தை மட்டும் அதிகரிக்கின்றன.
இதைத் தடுக்க சாப்பிட்டதும் 15 நிமிடங்கள் நடக்க வேண்டும். இதனால் தசைகள் குளுக்கோஸை சீராக உறிஞ்சும். உடனடியாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பது குறையும். இதனால் உடல் உற்பத்தி செய்ய வேண்டிய இன்சுலின் அளவும் குறைகிறது. இப்படி இன்சுலின் மூலக்கூறுகள் குறைவதால் வீக்கமும் குறைந்து வளர்சிதை மாற்ற வீதம் அதிகரிக்கும். சாப்பிட்ட பின் நடைபயிற்சி செய்வதால் கொழுப்புகள் விரைவாக உடைந்துவிடும். இரத்தவோட்டம் சுத்தமாக இருக்கும்.
சாப்பிட்டதும் 15 நிமிடமும் நடப்பது உங்களுடைய கலோரிகளை எரிக்க உதவுகிறது. இரத்தத்தில் சர்க்கரை அளவு உயராமல் இருப்பதால் எடை அதிகரிப்பு தடுக்கப்படுகிறது. தசைகள் உறுதியாகும். இதய நோய்களின் அபாயமும் 40% வரை குறைவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். சாப்பிட்ட பின்னர் சிலர் மந்தமாக உணர்வார்கள். ஒவ்வொரு வேளை உணவுக்கு பின்னும் 10 முதல் 15 நிமிடங்கள் நடப்பது நாள் முழுக்க சுறுசுறுப்பாக இருக்க உதவும். மேலும், இரவில் ஆழ்ந்த தூக்கம் கிடைப்பதை ஆதரிக்கிறது. இதனால் பல நாள்பட்ட நோய்களை தடுக்க முடியும்.