MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இவைகளை உங்க தட்டுக்குள் சேர்த்துக்கங்க!

சர்க்கரை வியாதியை கட்டுக்குள் வைத்துக் கொள்ள இவைகளை உங்க தட்டுக்குள் சேர்த்துக்கங்க!

சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும் இயற்கை மூலிகைகள் என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

2 Min read
Web Team
Published : Apr 23 2023, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இன்று உலகத்தில் பெரும்பாலானோர் அவதிப்படும் ஒரு வியாதி என்றால் அது டயபடிஸ் எனப்படும் சர்க்கரை நோய் தான் . சிறியவர்கள், பெரியவர்கள், பெண்கள், ஆண்கள் என்ற எந்த ஒரு பேதமின்றி அனைவருக்கும் வரக்கூடிய வியாதி தான் இந்த சர்க்கரை நோய்.

இந்த சர்க்கரை நோய்க்கு மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும், ஒரு சில இயற்கை வைத்தியத்தையும் பின்பற்றினால் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது.

இயற்கை முறை என்று கூறும் போது பல விதமான மூலிகைகள் அதற்கு துணை புரிகின்றன. இப்படியான இயற்கையாக கிடைக்கும் பொருளை வைத்து இயற்கையான முறையில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம். சர்க்கரையை கட்டுக்குள் வைக்க உதவும் இயற்கை மூலிகைகள் என்னென்ன என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

24

மஞ்சள்:

மஞ்சளில் காணப்படும் குர்குமின் எனும் வேதிப்பொருள் கணையத்தில் இருக்கும் திசுவினுள் ‘மேக்ரோபேஜ்’ என்ற தற்காப்பு செல்களில் நுழைந்து, ‘சைட்டோகைன்ஸ்’ என்ற அழற்சியை உருவாக்கி புரதத்தைச் சுரப்பதால் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்கள் சேதமடைய செய்கின்றன. இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதால், டைப் 2 நீரழிவு நோயினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

34

நாவல் பழம்:

இந்த பழத்தில் இருக்கும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச் சத்து, வைட்டமின் பி போன்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.
இதிலிருக்கும் இரும்புச்சத்து ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. இந்த பழத்தின் கொட்டைகளை பொடி செய்து தினமும் வெதுவெதுப்பான் தண்ணீரில் சேர்த்து குடித்து வரச் நீரழிவு நோயினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறையும் . இந்த பழம் மற்றும் கொட்டை ஆகியவை கணையத்தை பலப்படுத்துவதால் அதன் சுரப்பை சீராக்குகிறது.

வேப்பிலை :

வேப்பிலை கொழுந்தினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 5 இலைகளை மென்று தின்று வந்தாலே சுகர் உங்ளை எட்டிப் பருகும். அல்லது வேப்பம் பூவின் பொடியை தினமும் சிட்டிகை வெந்நரில் கலந்து குடித்து வந்தால் நீரழிவு நோயினை கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

44

சீந்தில் கொடி:

ஆயுர்வேதத்தின் மிக முக்கியமான மற்றும் பிரபலமான மூலிகைகளில் இந்த சீந்தில் கொடியும் ஒன்றாகும். இதில் அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் சர்க்கரை நோயுடன் போராடி அதனை கட்டுக்குள் வைத்திருக்க துணை புரிகிறது. தவிர இது இருமல் மற்றும் சளிக்கும் பயன்படுத்தலாம். தவிர இது கல்லீரலையும் பாதுகாக்கிறது.

வெந்தயம்:

வெந்தயத்தில் இருக்கும் புரதச்சத்து, கொழுப்புச் சத்து, மாவுச்சத்து ஆகியவைகள் நிறைந்து காணப்படுகின்றன . இந்த வெந்தயத்தை தினமும் தண்ணீர் அல்லது மோரில் சேர்த்து குடித்து வர சர்க்கரையின் அளவு படிப்படியாக குறைந்து வருவதை உணரலாம்.

இட்லியை புஸ்ஸுன்னு வர்ரதுக்கு மாவில் பேக்கிங் சோடா யூஸ் செய்தால் இந்த பிரச்சனைகளும் ஃபிரீயாவே வந்துரும்!

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
ஆரோக்கிய குறிப்புகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved