MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது!

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால் 80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது!

எத்தனை வயதானாலும் முதுகு வலி, மூட்டு வலி, தலைவலி என எந்த வலியும் ஏற்படாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பாதங்களின் அடியில் தேங்காய் எண்ணெய் தடவுவது எவ்வளவு உதவிகரமாக இருக்கும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

2 Min read
maria pani
Published : May 26 2023, 07:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

உங்களுடைய பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். வயதான காலத்தில் ஏற்படும் மூட்டு வலி முதல் கை, கால் வலி வரை எந்த வலியும் உங்களை அணுகாது. இது மட்டுமின்றி உடலின் பல்வேறு நன்மைகளுக்கு பாதங்களில் தேங்காய் எண்ணெய் தடவுவது உதவுகிறது. 

26

தூக்க கோளாறு 

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும். நல்ல தூக்கம் வரும். உடலில் இருக்கும் சோர்வு பறந்து போகும். 

36

வயிற்று பிரச்சனை 

சாதாரண வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வர குணமாகும். உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால் அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக காண்பீர்கள். 

46

வீக்கம் 

தூங்க செல்லும் முன் இரண்டு நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதால் கால்களில் இருக்கும் வீக்கம், வலி ஆகியவை குணமாகும். இதனை செய்ய ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலனை அனுபவிப்பீர்கள். தொடர்ந்து செய்வதால் நல்ல தூக்கம், வலியில்லாத கால்கள் வசப்படும். சிலருடைய கால்களில் எரிச்சல் உணர்வும் வலியும் காணப்படும். அதற்கும் இது நல்ல தீர்வு. 

56

மூல நோய் 

வருடக்கணக்கில் மூலநோயால் அவதிப்படுபவர்கள் கூட தேங்காய் எண்ணெயால் சுகம் பெறலாம். தேங்காய் எண்ணெயை உள்ளங்கைகளிலும், விரல்களுக்கிடையில், விரல் நகங்களுக்கு இடையிலும், நகங்களிலும் எடுத்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். நான்கு முதல் 5 துளி தேங்காய் எண்ணெயை தொப்புளில் வைத்து உறங்கச் சென்றால் கொஞ்சம் நல்லது. மலச்சிக்கல் தீர்ந்தாலே மூலம் கட்டுக்குள் வரும். இரவில் வெந்தம் ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை குடியுங்கள். 

66

நன்மைகள் பல...! 

தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்வதால் உடலில் சூட்டு கொப்பளங்கள் ஏற்படாமல் தவிர்க்கலாம். நல்ல தூக்கம் கிடைப்பதால் குறட்டையை தவிர்க்க முடியும். முழங்கால் வலி, மூட்டு வலிகள் இந்த மசாஜ் செய்வதால் குணமாகிறது. 

இப்படி மசாஜ் செய்வதற்கு தேங்காய் எண்ணெய் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது. கடுகு எண்ணெய் நல்லெண்ணெய் ஆகியவையும் உங்களுடைய பாதங்களில் மசாஜ் செய்ய ஏற்றவை. ஒவ்வொரு காலின் பாதங்களிலும் குறைந்தது மூன்று நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். 

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved