MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • விளையாடிவிட்டு தூங்கிய 13 வயது சிறுமிக்கு மாரடைப்பு.. சிகிச்சைக்கு முன் நேர்ந்த விபரீதம்

விளையாடிவிட்டு தூங்கிய 13 வயது சிறுமிக்கு மாரடைப்பு.. சிகிச்சைக்கு முன் நேர்ந்த விபரீதம்

விளையாடிவிட்டு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : maria pani
| Updated : Apr 01 2023, 12:52 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சமீபகாலமாக மாரடைப்பால் மக்கள் நிலைகுலைந்து உயிரிழப்பது அதிகரித்துள்ளது. குழந்தைகள், பெரியவர்கள், முதியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாமல் மாரடைப்புக்கு ஆளாகிறார்கள். தெலங்கானா மாநிலம், மஹ்பூபாபாத்தில் உள்ள மரிபெடா மண்டல் எனும் அப்பைபாலம் கிராமத்தில் நேற்று (மார்ச்.31) அதிகாலை 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்தார். 

25

விவசாய குடும்பத்தில் பிறந்தவர் ஸ்ரவந்தி (13). வீட்டிற்கு இரண்டாவது செல்ல மகள். ஆறாம் வகுப்பு மாணவியான ஸ்ரவந்தி, வியாழக்கிழமை இரவு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டுள்ளார். குடும்பத்தினர் ஸ்ரவந்தியை மருத்துவரிடம் அழைத்து செல்வதற்குள் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. வியாழன் இரவு விளையாடி விட்டு இயல்பாக தூங்க சென்றுள்ளார் ஸ்ரவந்தி. கொஞ்ச நேரம் தூங்கியுள்ளார். சுமார் 12.30 மணியளவில் சிறுமிக்கு இதயத்தில் வலி ஏற்பட்டது. கடுமையான சுவாசப் பிரச்சனையும் வரவே, தனக்கு நெஞ்சுவலி இருப்பதாக பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.

35

மருத்துவரிடம் அழைத்து செல்ல வீட்டில் உள்ளவர்கள் ஆட்டோவை ஏற்பாடு செய்வதற்குள், அதிகாலை 1 மணியளவில் சிறுமி இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். சிறுமியின் மாமா அவளுக்கு சிபிஆர் சிகிச்சை கொடுக்க முயன்றுள்ளார். ஆனால் அது பலனளிக்கவில்லை. 

 

 

45

ஸ்ரீராம நவமியையொட்டி வியாழக்கிழமை பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சிறுமி ஸ்ரவந்தி தனது தோழிகளுடன் விளையாடிவிட்டு பாட்டி வீட்டில் தூங்கினார். ஆனால் எதிர்பாராத விதமாக இந்த விபரீதம் ஏற்பட்டுள்ளது. வாழ வேண்டிய மகள் இறந்ததால் குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். தெலங்கானாவில் கடந்த 2 மாதங்களாக திடீர் மாரடைப்புக்கு ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் பலியாகி வருவது பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க: வீட்டிலே மருந்து.. இந்த 3 செடிகளை வளர்த்துங்க போதும்!! ஒவ்வொரு செடியும் எத்தனை நோய்களை விரட்டும் தெரியுமா?

55

சிபிஆர் என்றால் என்ன? 

சிபிஆர் (CPR) என்பது மாரடைப்பால் பாதிக்கப்படும் நபருக்கு உடனடியாக கொடுக்கப்படும் சிகிச்சை. அவரது இரத்த ஓட்டம், சுவாசத்தை சீராக மாற்ற முதலுதவியாக செய்யப்படுகிறது. பாதிக்கப்பட்ட நபருக்கு மருத்துவ உதவி கிடைக்கும் வரை அவருடைய மூளையின் இயக்கத்தை பாதுகாக்க இதை செய்வார்கள். இந்த சிகிச்சையில் மார்பில் கை வைத்து அழுத்தப்படுகிறது. அல்லது வாயோடு வாய் வைத்து சிபிஆர் சிகிச்சை செய்வார்கள். 

இதையும் படிங்க: மணமேடையில் துப்பாக்கியுடன் போஸ்... திடீரென மணமகள் முகத்தில் வெடித்த துப்பாக்கி.. உடனே மணமகன் செய்த காரியம்..!

About the Author

MP
maria pani

Latest Videos
Recommended Stories
Recommended image1
இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
Recommended image2
Now Playing
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake
Recommended image3
Now Playing
பழநி பஞ்சாமிர்தம் கப் கேக்| நோ மைதா| நோ சர்க்கரை| 10 minutes easy healthy snacks
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved