MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • உடல்நலம்
  • உணவு
  • கல்லீரல் பிரச்னை முதல் ரத்த அழுத்தம் வரை.. அசரவைக்கும் நன்மைகளை கொண்ட பெருஞ்சீரகம் பற்றி தெரியுமா?

கல்லீரல் பிரச்னை முதல் ரத்த அழுத்தம் வரை.. அசரவைக்கும் நன்மைகளை கொண்ட பெருஞ்சீரகம் பற்றி தெரியுமா?

நம் வீட்டு சமையலறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் சோம்பு என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகத்தின் நன்மைகளை பார்க்கலாம்.

1 Min read
Raghupati R
Published : Apr 09 2023, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

உணவே மருந்து என்னும் நமது பாரம்பரிய சமையல் மாறிக்கொண்டே வருகிறது. நாம் அன்றாடம் எந்தவொரு உணவிலும் வாசனைக்காகவே சில பொருட்களை சேர்ப்போம். அவை வெறும் வாசனைக்கு மட்டும் என்றில்லாமல், மருத்துவ குணத்தையும் கொண்டிருக்கும்.

26

நம் வீட்டு சமையலறையில் தவறாமல் இடம்பெற்றிருக்கும் சோம்பு என்று அழைக்கப்படும் பெருஞ்சீரகம் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். பெருஞ்சீரக விதைகள் செரிமானத்தை அதிகரிக்கும் பண்புகளுக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் பயன்படுத்தப்படுகின்றது.

36

வீட்டில் இருக்கும் சிறு குழந்தைகளுக்கு வாயு தொல்லை, வயிற்று உப்பசம் போன்ற கோளாறுகளும் ஏற்படும். அந்த நேரங்களில் சிறிதளவு சோம்பை தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து விட்டு, பின் மிதமான சூட்டில் அந்த சோம்பு நீரை ஒரு டம்ளர் அருந்தினால் நிவாரணம் கிடைக்கும்.

இதையும் படிங்க: கேன்சர் வராமல் தடுக்கும் உணவுகளின் பட்டியல்.. இந்த 10 உணவுகள்! எத்தனை நோய் வந்தாலும் விரட்டும்..!!

46

மேலும் இரைப்பை பிரச்னை, மாதவிடாய்க்கோளாறு, செரிமானக் கோளாறுகள், வயிற்றில் உள்ள ஒட்டுண்ணி பிரச்சனை, பெருங்குடல் கோளாறுகள் உள்ளிட்ட இன்னும் பலவற்றுக்கு பெருஞ்சீரக டீ நன்மை தரும்.

சில நேரங்களில் ஏற்படும் விக்கல் தண்ணீர் குடித்தாலும் நிக்காது, அதற்கு பெருஞ்சீரகத்தை மோரில் கலந்து குடித்தால் விக்கல் நின்று விடும். உடல் எடையையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

56

பெருஞ்சீரகம் தினமும் உண்பதால் ரத்தம் சுத்திகரிப்பதோடு மட்டுமல்லாமல், ரசாயன கழிவுகளையும் உடலில் இருந்து வெளியே அகற்றுகிறது.ஒரு நாளைக்கு ஒரு முறையாவது சிறிதளவு பெருஞ்சீரகங்களை நன்கு மென்று சாப்பிட்டு வருவதால் கல்லீரல் பலம் பெரும்.

66

சோம்பில் உள்ள இரும்புசத்து மற்றும் வைட்டமின் C உடலின் இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. கண்பார்வை சக்தியை அதிகப்படுத்தும் திறனும், உயர்ரத்த அழுத்தத்தை குறைத்து சீர்படுத்தும் திறனும், தாய்ப்பால் சுரப்பை அதிகப்படுத்தும் தன்மையும் இதற்கு உண்டு. இது மலச்சிக்கலையும் போக்கும்.

இதையும் படிங்க: வெயிலுக்கு தயிர் ரொம்ப சாப்பிடுறீங்களா! இந்த 5 தவறுகளை மட்டும் பண்ணாதீங்க! மத்தபடி ரொம்ப நல்லது!

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
உணவு
ஆரோக்கியம்
சுகாதார நன்மைகள்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved