"கைவிட்ட சென்னை.. காப்பாற்றிய தெலுங்கானா".. VJ ரம்யா போட்ட சர்ச்சை பதிவு - கொதித்துப்போன இணையவாசிகள்!
VJ Ramya : இன்று சின்னத்திரையில் உள்ள பல நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் தஞ்சாவூரில் பிறந்து, மாடல் அழகியாக தன்னை நிலைநிறுத்திக்கொண்ட நடிகை தான் ரம்யா.
VJ Ramya
கடந்த 2004ம் ஆண்டு மிஸ் சென்னை போட்டியில் கலந்துகொண்டதோடு அந்த துறைக்கு முற்றுப்புள்ளி வைத்த ரம்யா அதன் பிறகு நேரடியாக சின்னத்திரைத்தில் தொகுப்பாளியனாக தனது பயணத்தை துவங்கினர். பிரபல தொலைக்காட்சிகளில் இவர் இன்றளவும் முன்னணி நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றி வருவது அனைவரும் அறிந்ததே.
Actress Ramya
கடந்த 2007ம் ஆண்டு வெளியான ராதா மோகனின் மொழி திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரை நடிகையாக மாறிய இவர், மங்காத்தா, வனமகன் துவங்கி மாஸ்டர் மற்றும் சங்கத்தலைவன் என்று பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகின்றார். தாது இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் ஆக்டிவாக இருக்கும் ரம்யா, சில நேரங்களில் அவர் வெளியிடும் சர்ச்சை பதிவால் இணையவாசிகளால் வசைபாடப்படுவதும் உண்டு.
Ramya
அந்த வகையில் இப்பொது சென்னை மிக்ஜாம் புயலால் பெரும் இன்னல்களை சந்தித்து வரும் நேரத்தில், ரம்யா போட்ட பதிவு ஒன்று பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. அவர் போட்ட இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றில், "என் தாய் வீடு என்னை கைவிட்டு விட்டது, என் இரண்டாம் தாய் வீடு என்னை காக்கின்றது" என்று கூறி அந்த ஸ்டோரியில் எழுதியுள்ளார். மேலும் அவர் விமானத்தில் செல்லும் போட்டோ ஒன்றையும் இணைத்துள்ளார்.
அவர் தெலுங்கானா செல்வதாகவும் அதில் கூறியுள்ளார், இதை கண்ட இணையவாசிகள், உங்களுக்கு இவ்வளவு பெரிய புகழை தேடித்தந்தது சென்னை தான், இன்று நீங்கள் வாழும் வாழ்க்கையை உங்களுக்கு கொடுத்தது சென்னை தான். அப்படி இருக்க, வாழ்வளித்த இடத்தை இப்படி கூறிவிட்டு செல்வது எந்த விதத்தில் நியாயம். வெள்ளம் வடிந்ததும் நீங்கள் மீண்டும் இங்கு தான் வரவேண்டும் என்று கூறி தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.