மறைந்த நடிகை சவுந்தர்யாவின் 100 கோடி உயில் என்ன ஆனது? பங்கு போட்டுக்கொண்ட இருவர்.. வெளியான அதிர்ச்சி தகவல்!
மறைந்த நடிகை சவுந்தர்யா விபத்தில் சிக்கி இறப்பதற்கு முன்பே ரூபாய் 100 கோடி சொத்துக்கான உயில் ஒன்றை எழுதியதாக கூறப்படும் நிலையில், அதுகுறித்த அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ரசிகர்களை கவரும் கண்கள், வசீகரிக்கும் அழகு, மத்தாப் பூ சிரிப்பு என பார்த்ததுமே அனைவரையும் அழகில் மயக்கிய தேவதை தான் நடிகை சவுந்தர்யா. பெங்களூரை சேர்ந்த இவர், கன்னடம் பேசும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். 1972 ஆம் ஆண்டு பிறந்த நடிகை சவுந்தர்யாவுக்கு திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஏற்படவே, வாய்ப்பு தேட துவங்கினார்.
கன்னடத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் வாய்ப்பை பெற்ற இவருக்கு, முதல் படமே வெற்றிப்படமாக அமைந்தது. பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். அதை போல் பாலிவுட்டிலும், தமிழில் வெளியான சூரிய வம்சம் படத்தில் தேவயானி நடித்த கதாபாத்திரத்தில் நடிகை சவுந்தர்யா நடித்திருந்தார். இதில் அமிதாப்பச்சனுக்கு ஜோடியாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரவே, அடுத்தடுத்து ஹிந்தி படங்களில் நடிக்க வாய்ப்பு குவிந்தது. அந்த சமயத்தில் சவுத்தர்யா கன்னடம், தமிழ், மலையாளம், போன்ற தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வந்ததால் ஹிந்தி பட வாய்ப்புகளை ஏற்க முடியாமல் போனது.
தமிழில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக 'பொன்னுமணி' என்கிற படத்தில் அறிமுகமான சவுந்தர்யா, இதைத்தொடர்ந்து ரஜினி, கமல், விஜயகாந்த், என தொடர்ந்து உச்ச நட்சத்திரங்களுக்கு ஜோடி போட்டார். குறிப்பாக இவர் நடித்த தவசி, சொக்கத்தங்கம் ,அருணாச்சலம், படையப்பா, சேனாதிபதி, காதலா காதலா, இவன், போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
திரைப்பட துறையைத் தாண்டி அரசியலிலும் கால் பதித்த நடிகை சவுந்தர்யா 2004 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். மேலும் தன்னுடைய கட்சிக்கு வாக்கு சேகரிக்க தன்னுடைய சகோதரர் அமர்நாத்துடன் விமானத்தில் சென்றபோது, இவர் சென்ற விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த விமானம் வெடித்து சிதறியது. இதில் நடிகை சவுந்தர்யா பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்றளவும் ரசிகர்கள் மனதை விட்டு நீங்காமல் இருக்கும் நடிகை சவுந்தர்யா மிகக் குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தவர். திருமணமான ஒரே வருடத்தில் உயிரிழந்த நடிகை சவுந்தர்யா இறந்தபோது கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இவர் இறப்பதற்கு முன்னர் கோடிக்கணக்கில் சொத்துக்கு அதிபதியாக இருந்த நிலையில், தன்னுடைய சொத்து குறித்து உயில் ஒன்றை எழுதி வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் வெளியான போது அதனை அவருடைய தாயார் மற்றும் கணவர் இரண்டு பேருமே மறுத்தனர். 31 வயதிலேயே அவர் எந்த உயிலும் எழுத வேண்டிய அவசியம் இல்லை என்று அவர்கள் கூறியிருந்தனர்.
ஆனால் தற்போது நடிகை சவுந்தர்யாவின் 100 கோடி உயில் விஷயம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், உயில் எழுதியதை மறைத்து சவுந்தர்யாவின் அம்மா மற்றும் கணவர் இருவருமே பாதி பாதியாக பங்கு போட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவல் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
Soori: ஆசையோடு ஓட்டு போட வந்த சூரிக்கு காத்திருந்த அதிர்ச்சி! ஆதங்கத்தோடு வெளியிட்ட வீடியோ !