ஊருக்கு தான் உபதேசம்! வாக்களிப்பதை விட தான் முக்கியமா? ஜோவை சுட்டி காட்டி சூர்யாவை விளாசும் நெட்டிசன்கள்!
நடிகை ஜோதிகாவுக்கு சென்னையில் வாக்களிக்கும் உரிமை இருந்தும் அவர் ஏன் இம்முறை வாக்களிக்க வரவில்லை. மேலும் அவர் சுற்றுலா சென்றுள்ள வீடியோவை வெளியிட நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள்.
தமிழகத்தில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய நாடாளுமன்ற தேர்தல், மாலை 6 மணிக்கு மேல் தான் முடிவடைந்தது. காலை முதலே பொதுமக்கள், பிரபலங்கள், அரசியல்வாதிகள், என அனைவரும் ஆர்வமாக பங்கேற்று தங்களுடைய வாக்கினை செலுத்தி வந்தனர்.
இந்திய அளவில் 500க்கும் மேற்பட்ட தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தல் ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. நேற்று தமிழக மற்றும் புதுவையில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில் பங்கேற்பதற்காக பல முன்னணி நடிகர், நடிகைகள், தங்களின் படப்பிடிப்பை கூட ரத்து செய்துவிட்டு தங்களுடைய ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
குறிப்பாக நடிகர் விஜய் ரஷ்யாவில் நடந்த 'கோட்' படபிடிப்பில் இருந்து வந்து வாக்களித்தார். அதைப்போல் நடிகர் அஜித், காலை வாக்கு பதிவு துவங்கும் முன்னரே வாக்கு சாவடிக்கு வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
Jyothika and Suriya
நடிகர் சூர்யா, தன்னுடைய தன்னுடைய தந்தை மற்றும் தம்பி கார்த்தியுடன் வந்து வாக்களித்தார். மேலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அவரின் மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, இயக்குனர் வெற்றிமாறன்,கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா ராஜேஷ், போன்ற ஏராளமான பிரபலங்கள் ஆர்வமுடன் வந்து ஓட்டு போட்டனர்.
ஆனால் நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகாவுக்கு, சென்னையில் வாக்குரிமை இருந்தும் அவர் பங்கேற்காத நிலையில், படப்பிடிப்பு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. ஆனால் ஜோதிகா நேற்று வாக்களிக்காததற்கு காரணம் அவர் நேபாளுக்கு சுற்றுலா சென்றுள்ளதால்தான் என்பதை இன்ஸ்டாகிராமில் வீடியோ போட்டு தெரிவித்துள்ளார்.
Jyothika
இதை பார்த்து நெட்டிசன்கள் பலர், ஒரு இந்திய பிரஜையாக வாக்களிப்பதை விட சுற்றுலா தான் முக்கியமாக போய் விட்டதா என கேள்வி எழுப்பி வருகிறார்கள். அதே போல் நம் நாடு, நம் உரிமை, வாக்கு போட வேண்டும் என ஊருக்கு உபதேசம் சொல்லும் சூர்யாவின் குடும்பமே இப்படி நடந்து கொள்கிறார்கள் என விளாசி வருகிறார்கள்.