Suriya Reaction: 'கங்குவா' முழு படத்தையும் பார்த்த சூர்யா! இயக்குனர் சிவாவிடம் என்ன சொன்னார் தெரியுமா?
கங்குவா முழு படத்தின் அவுட்டையும் பார்த்து விட்டு, சூர்யா எப்படி ரியாக்ட் செய்துள்ளார்... என்பது பற்றிய தகவல் தற்போது கசிந்துள்ளது.
Kanguva
நடிகர் சூர்யா இதுவரை நடித்துள்ள படங்களை விட, மிக அதிகமான பொருட்செலவில் உருவாகியுள்ள திரைப்படம் 'கங்குவா'. இந்த படத்தை தல அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான, சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வரலாற்று கதையம்சம் கொண்ட ஃபேண்டஸி படமாக இப்படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தில் தற்கால கதையின் காட்சிகளும் இடம்பெறும் வண்ணம் இயக்கியுள்ளார் இயக்குனர்.
இந்த படத்தில் நடிகர் சூர்யா, 5-திக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ள நிலையில், பாபி தியோல், யோகி பாபு, ஜெகபதி பாபு, ரெடின் கிங்ஸ்லி, நட்ராஜ் சுப்பிரமணியம், கோவை சரளா, ரவி ராகவேந்திரா, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து முடிந்துள்ள நிலையில், போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. கோடை விடுமுறையை குறிவைத்து இந்த படத்தை வெளியிட படக்குழு ஆயத்தமாகி உள்ளதாக கூறப்படும் நிலையில், விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இப்படத்தின் அவுட்டை பார்க்க மிகவும் ஆர்வமாக இருந்த சூர்யாவுக்கு, இயக்குனர் சிறுத்தை சிவா படத்தின் ரஃப் அவுட்டை காட்டிய நிலையில், படத்தை பார்த்து விட்டு... கட்டிப்பிடித்து தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, மிகவும் திருப்பிதிகாரமாக உள்ளதாக சூர்யா கூறியுள்ளதாக படக்குழு தரப்பில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இந்த படத்தில் நடித்து முடித்த கையேடு, வாடி வாசல் படத்தை கையில் எடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகினார். பிரபல இயக்குனர் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் உருவாக உள்ள "கர்ணா" என்ற இதிகாச கதை அம்சம் கொண்ட படத்தில் சூர்யா கர்ணனாக நடிக்கின்றார். இந்த படத்தில் பிரபல நடிகை ஜான்வி கபூர் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. இந்த படத்தை ஜான்வியின் தந்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார்.
அதே போல் சூரரை போற்று படத்திற்கு பிறகு மீண்டும் பெண் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் தன்னுடைய 43-ஆவது படத்தை நடிக்கிறார் சூர்யா என்பது குறிப்பிடத்தக்கது.
விதியை மீறி தீனா போட்ட திட்டம்.. மிரள விட்ட இளையராஜா! புதிய தலைவரானார் சபேசன்..!