ஜஸ்ட் மிஸ்... நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு; நூலிழையில் உயிர்தப்பிய ராஷ்மிகா மந்தனா
நடிகை ராஷ்மிகா மந்தனா சென்ற விமானம் திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Rashmika
பான் இந்தியா அளவில் பிசியான நடிகையாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவர் நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த அனிமல் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை ருசித்தது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.900 கோடி வசூலை வாரிக்குவித்து மெகா ஹிட் ஆனது. அனிமல் படத்தின் வெற்றியை தொடர்ந்து புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. சுகுமார் இயக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிக்கிறார் ராஷ்மிகா.
Rashmika Mandanna
இதுதவிர தமிழில் ரெயின்போ, இந்தியில் இரண்டு படங்கள், தெலுங்கில் தனுஷ் ஜோடியாக ஒரு படம் என செம்ம பிசியாக நடித்து வருகிறார் ராஷ்மிகா. இவர் அண்மையில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதற்காக மும்பை வந்த ராஷ்மிகா, அதன் ஷூட்டிங்கிலும் பங்கேற்றார். இதையடுத்து மும்பையில் இருந்து ஐதராபாத் கிளம்பிய ராஷ்மிகா, தன்னுடைய விமான பயணம் குறித்து ஒரு பகீர் சம்பவத்தை பகிர்ந்துள்ளார்.
இதையும் படியுங்கள்... ஃபோர்ப்ஸின் டாப் 30 பட்டியலில் இடம்பிடித்த ராஷ்மிகா... அதற்கு அவரது ரகசிய காதலனின் ரியாக்ஷன் என்ன தெரியுமா?
Rashmika Flight repaired
மும்பையில் இருந்து ஐதராபாத் கிளம்பிய விமானத்தில் நடுவானில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் அதிலிருந்த பயணிகள் பதற்றம் அடைந்தனர். ஆனால் சாதுர்யமாக செயல்பட்ட விமானி, விமானத்தை மீண்டும் மும்பைக்கே திருப்பி கொண்டு சென்று அவசர அவசரமாக தரையிறக்கினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதில் அனைவரும் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினர்.
Rashmika Insta story
இச்சம்பவத்தின் போது விமானத்தில் நடிகை ஷ்ரத்தா தாஸ் உடன் தான் பயணித்ததாக குறிப்பிட்டுள்ள ராஷ்மிகா, இப்படி தான் இன்று நாங்கள் உயிர்தப்பினோம் என இருவரின் காலை சீட்டின் மீது வைத்தபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு குறிப்பிட்டுள்ளார். ராஷ்மிகாவின் இந்த பதிவு இணையத்தில் படு வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்...
நிச்சயதார்த்தத்தோடு நின்றுபோன திருமணம்... ராஷ்மிகாவோடு இன்னும் தொடர்பில் இருக்கிறேன்- ரக்ஷித் ஷெட்டி உருக்கம்