Coolie: சரத்குமார் பட தலைப்பில் ரஜினி! இது LCU படமா? டைட்டில் டீச்சரின் இந்த விஷயங்களை கவனிசீங்களா?
நடிகர் சரத்குமார் நடிப்பில், 1995-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான 'கூலி' திரைப்படத்தின் பெயர் தான் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-ஆவது படத்திற்கு வைக்கப்பட்டுள்ள்து.
Thalaivar 171
நடிகர் சரத்குமார் நடிப்பில், 1995-ஆம் ஆண்டு இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் வெளியான 'கூலி' திரைப்படத்தின் பெயர் தான் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-ஆவது படத்திற்கு வைக்கப்பட்டுள்ள்து.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கடைசியாக 'லியோ' படம் வெளியான நிலையில், இந்த படத்தை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அவர் நடிக்கும் 171-ஆவது படத்தை இயக்க உள்ள தகவலை உறுதி செய்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஞானவேல் இயக்கத்தில் நடித்து வரும் வேட்டையன் படப்பிடிப்பு இன்னும் நின்னிறைவடையாததால், தலைவர் 171-ஆவது படம் இன்னும் துவங்கப்படாமல் உள்ளது.
எனினும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றி, சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தலைவர் பல வாட்சிகளை கையில் சங்கிலி போல் போட்டிருந்ததால் இது ஒரு டைம் ட்ராவல் படமா? என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்தது. ஆனால் இது டைம் ட்ராவல் படம் இல்லை என்பதை உறுதி செய்தார் லோகேஷ் கனகராஜ்.
இதை தொடர்ந்து இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் டைட்டில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டைட்டில் கூலி என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் சமூக வலைதளத்தில் இந்த டைட்டிலை தாறுமாறாக வைரலாக்கி வருகிறார்கள்.
அதே போல் இப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் மற்றும். இப்படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களை வைத்து இதுவும் லோகேஷ் கனகராஜின் LCU படமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
Thalaivar 171 Update
இதுவரை போதை மருந்து கடத்தல் குறித்து பேசியுள்ள லோகேஷ் கனகராஜ், இந்த முறை தங்கம் கடத்தல் கும்பம் குறித்தும், பேசியுள்ளதாக தெரிகிறது. வில்லன்களை டீஸரிலேயே வெளுத்து வாங்கியுள்ள நிலையில், இதில் குறிப்பாக ஜே என்கிற எழுத்துடன் ரோலக்ஸ் வாட்ச் காட்பட்டுள்ளதால்... இதில் ரோலக்ஸ் கதாபாத்திரம் குறித்து லோகேஷ் காட்டியுள்ளாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
Thalaivar 171
குறிப்பாக கமல், ரஜினி நடித்த ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்திற்காக கவிஞர் கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளான, "அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள், தப்பென்ன சரியென்ன எப்போதும் விளையாடு, அட பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே... எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே, சோறுண்டு, சுகமுன்பு, மது உண்டு, மாது உண்டு, மனம் உண்டு, என்றாலே சொர்க்கத்தில் இடம் உண்டு போடா... என டயலாக்காக பேசியுள்ளார். இதன் மூலம் கமல்ஹாசன் இந்த படத்தில் நடிப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளதாக ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
இப்படம் LCU-வின் ஃபைனல் திரைப்படமா என்கிற பேச்சும் அடிபட்டு வருகிறது. இப்படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ரஜினிகாந்த் கூலி கதாபாத்திரத்தில் தீ, உழைப்பாளி, ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.