இந்த மனசு யாருக்கு வரும்... சொன்னதை செய்த ராகவா லாரன்ஸ் - விஜயகாந்த் மகன் படத்தில் நடிக்க ஒப்பந்தம்
விஜயகாந்த் மகன் ஷண்முகப் பாண்டியன் உடன் படத்தில் நடிக்க ரெடியாக இருப்பதாக கூறிய ராகவா லாரன்ஸ் தற்போது அதற்காக டேட்டும் கொடுத்துள்ளார்.
Raghava Lawrence
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து மக்கள் மனதில் கேப்டனாக நீங்கா இடம்பிடித்த அவர் கடந்த டிசம்பர் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். கேப்டனின் மறைவுக்கு பின்னர் அவரது மகன்களை வீட்டில் சென்று சந்தித்த ராகவா லாரன்ஸிடம் பிரேமலதாவின் உறவினர் ஒருவர் நீங்க தான் ஷண்முகப் பாண்டியனை பார்த்துக்கனும்னு சொன்னாராம்.
இதனால் ஷண்முகப் பாண்டியனுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என முடிவெடுத்த ராகவா லாரன்ஸ், தான் ஷண்முகப் பாண்டியன் நடிக்கும் படத்திலோ, அல்லது இருவரும் இணைந்து நடிக்கும் படி யாரேனும் கதை வைத்திருந்தாலோ தான் நடிக்க தயாராக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டார். தற்போது சொன்னபடியே அதை செய்தும் காட்டி இருக்கிறார் லாரன்ஸ்.
இதையும் படியுங்கள்... விஜயகாந்த் மகன் இத்தனை படங்களில் நடித்துள்ளாரா? பலரை வளர்த்து விட்ட கேப்டனின் மகனுக்கா இந்த நிலை?
அதன்படி ஷண்முகப் பாண்டியன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படைத் தலைவன் என்கிற திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடிக்க 3 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளாராம் லாரன்ஸ். மேலும் இந்த படத்தின் ரிலீஸ் சமயத்திலும் புரமோஷனுக்காக உதவவும் முடிவெடுத்து இருக்கிறாராம். லாரன்ஸின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஷண்முகப் பாண்டியன் நடிப்பில் உருவாகி வரும் படைத் தலைவன் திரைப்படத்தை அன்பு என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க உள்ளார். மேலும் ஒளிப்பதிவு பணிகளை சதீஷ்குமாரும், படத்தொகுப்பு பணிகளை இளையராஜாவும் மேற்கொள்கின்றனர். இப்படம் கும்கி பட பாணியில் யானையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... அஞ்சலி செலுத்த வந்த இடத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்த டிடிஎப் வாசன்... விரட்டியடித்த விஜயகாந்த் ரசிகர்