புடிச்சாலும் புளியங்கொம்பு.. ராதா மகள் கார்த்திகாவின் கணவர் ரோஹித் மேனனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
80-களில் தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த, பிரபல நடிகை ராதாவின் மகள் கார்த்திகா நாயருக்கு, சமீபத்தில் ரோஹித் மேனன் என்பவருடன் திருமணம் நடந்த நிலையில், ரோஹித் மேனனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
நடிகை ராதா, தமிழில் இயக்குனர் பாரதிராஜா இயக்கிய 'அலைகள் ஓய்வதில்லை' என்கிற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடி போட்டார். 10 ஆண்டுகள் செம்ம பீக்கில் இருந்த இவர், பின்னர் ஹோட்டல் தொழிலதிபரான ராஜசேகர் நாயர் என்பவரை, 1991 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
Karthika nair
திருமணத்திற்கு பின்னர் திரையுலகில் இருந்து முழுமையாக விலகிய ராதாவுக்கு, கார்த்திகா நாயர், துளசி நாயர், என இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். கார்த்திகா மற்றும் துளசி இருவரும் தன்னுடைய அம்மாவை போலவே சினிமாவில் முன்னணி நடிகையாக மாற வேண்டும் என்கிற ஆசையில் திரைப்படங்களில் நடித்த நிலையில், பட வாய்ப்பு கிடைக்காததால்... திரை உலகில் இருந்து விலகி, தன்னுடைய அப்பாவின் தொழிலில் கவனம் செலுத்த துவங்கினர்.
Karthika nair
ராஜசேகர் நாயர், 'உதய சமுத்ரா' என்கிற பெயரில் நட்சத்திர ஹோட்டலை நிர்வாகம் செய்து வருகிறார். மும்பை, கேரளா மற்றும் வெளிநாடுகளிலும் இவருக்கு சொந்தமாக 5 ஸ்டார் மற்றும் 7 ஸ்டார் ஹோட்டல்கள் இயங்கி வருகிறது.
இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம், கார்த்திகா நாயருக்கும், துபாயை சேர்ந்த தொழிலதிபர் ரோஹித் மேனன் என்பவருக்கும் மிகப் பிரம்மாண்டமாக திருமணம் நடந்தது. இவர்களின் திருமணம் கேரளாவில் உள்ள 'உதய சமுத்ரா' ஹோட்டல் ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடந்த நிலையில், இதில் பல திரை பிரபலங்கள் கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Raashii Khanna: குட்டை பாவாடையில் வாணி கபூருடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய.. ராஷி கண்ணா! வைரல் போட்டோஸ்!
ஹல்தி, மெஹந்தி, ப்ரீ மேரேஜ் ரிசப்ஷன், திருமணம், என இவர்களின் வெட்டிங் சுமார் 4 நாட்கள் மிகவும் பிரமாண்டமாக நடந்துள்ளது. திருமணம் அன்று, 500 பவுன் நகை அலங்காரத்துடன்... சுமார் 8 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராயர்ஸ் காரில் வந்து இறங்கினார் கார்த்திகா. 500 சவரன் நகையுடன் தகதகவென மின்னி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.
மகளுக்கு 500 சவரன் நகை மட்டும் இன்றி, பல கோடி மதிப்புள்ள ஹோட்டல் ஒன்றையும் சீதனமாக ராதா மற்றும் ராதாவின் கணவர் ராஜசேகர் நாயர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
ரோஹித் மேனன் தொழிலதிபர் என்பதை தாண்டி அவரைப் பற்றிய பிற தகவல்கள் வெளியாகாத நிலையில், தற்போது ரோஹித் மேனனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. துபாயில் முன்னணி இளம் தொழிலதிபராக இருக்கும் ரோஹித் மேனன், கேரளாவை பூர்வீகமாகக் கொண்டவர் என்றாலும் துபாயில் தான் வளர்ந்துள்ளார். இவரின் சொத்து மதிப்பு 500 கோடிக்கு மேல் இருக்கும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, பிடித்தாலும் மகளுக்கு புளியங்கொம்பாக தான் ராதா பிடித்துள்ளார் என ரசிகர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D