எனக்கு நீ... உனக்கு நான்! தினேஷின் பிக்பாஸ் எண்ட்ரிக்கு பின்... ரச்சிதா போட்ட எமோஷனல் பதிவு வைரலாகிறது
தினேஷை பிரிந்து வாழும் ரச்சிதா, அவர் வைல்டு கார்டு எண்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றுள்ள நிலையில் ஒரு எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
Rachitha, dinesh
சின்னத்திரை சீரியல்களில் ரீல் ஜோடியாக நடித்தபோது காதல் ஏற்பட்டு ரியல் ஜோடி ஆனவர்கள் ஏராளம். அப்படி சீரியலில் நடித்ததன் மூலம் காதல் ஏற்பட்டு திருமணம் செய்துகொண்டவர்கள் தான் தினேஷும், ரச்சிதா மகாலட்சுமியும். பிரிவோம் சந்திப்போம் தொடரில் நடித்தபோது தான் தினேஷுக்கும் ரச்சிதாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் கடந்த 2013-ம் ஆண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
Rachitha Mahalakshmi
திருமணத்துக்கு பின்னர் இருவருமே சீரியல்களில் நடித்து வந்தனர். ரச்சிதா நடித்த சரவணன் மீனாட்சி சீரியல் அவருக்கு பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது. அதேபோல் தினேஷுக்கு பூவே பூச்சூடவா சீரியல் திருப்புமுனையாக அமைந்தது. இதனிடையே கடந்த 2019-ம் ஆண்டு நாச்சியார்புரம் என்கிற சீரியலில் தினேஷும், ரச்சிதாவும் ஜோடியாக நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேற்பாடு ஏற்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Dinesh and Rachitha
இதையடுத்து தினேஷை பிரிந்து தனது பெற்றோருடன் வாழ்ந்து வந்தார் ரச்சிதா. ஆனால் இருவருமே இதுவரை விவாகரத்து பெறவில்லை. இதனிடையே கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ரச்சிதா, தினேஷை பற்றி வாய்திறக்கவில்லை என்றாலும், அவரது கணவர் தினேஷ் வெளியே அவருக்காக வாக்குகளை சேகரித்து, பேட்டி கொடுத்து வந்தார். இதனால் பிக்பாஸுக்கு பின் அவர்கள் இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
Dinesh wildcard entry
ஆனால் பிக்பாஸுக்கு பின் நிலைமை தலைகீழாக மாறியது. தினேஷ் தன்னை தொந்தரவு செய்வதாக கூறி ரச்சிதா காவல் நிலையத்தில் புகார் அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். அதனால் அவர்கள் இருவர் இடையேயான விரிசல் அதிகமானது. இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கி உள்ளார் தினேஷ். இதில் எண்ட்ரி கொடுக்கும் போது தன் வாழ்க்கை மோசமான நிலைக்கு வந்துவிட்டதாக ரச்சிதா பற்றி சூசகமாக பேசிவிட்டு பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.
Rachitha mahalakshmi Instagram post
இந்த நிலையில், நடிகை ரச்சிதா, தினேஷ் எண்ட்ரிக்கு பின்னர் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது. அந்த பதிவில், அண்மையில் உயிரிழந்த தனது தந்தையின் போட்டோ முன்னர் தானும் தனது தாயும் கைகோர்த்து நின்றபடி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, உனக்கு நான்... எனக்கு நீ என கேப்ஷன் கொடுத்துள்ளார். இதன்மூலம் இனி தினேஷுக்கு தன் வாழ்க்கையில் இடமில்லை என்பதை ரச்சிதா சூசகமாக கூறி உள்ளதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... ரஜினியோட எனக்கு ரகசிய திருமணம்னு தெரிஞ்சதும் கோலிவுட்டே ஷாக் ஆகிட்டாங்க - பகீர் தகவலை வெளியிட்ட பிரபல நடிகை