எல்லாருக்கும் அனிருத் பாட்டு பிடிக்கும்! ஆனா அனிருத்துக்கு பிடித்த மற்ற இசையமைப்பாளர்களின் songs என்னதெரியுமா?
கோலிவுட்டில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், தனக்கு பிடித்த மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களை பற்றி கூறி இருக்கிறார்.
anirudh
முதல் பாடலிலேயே உலகம் முழுவதும் ஓவர் நைட்டில் பேமஸ் ஆனவர் தான் அனிருத். 3 படத்துக்காக அவர் இசையமைத்த ஒய் திஸ் கொலவெறி பாடல் ரிலீசான உடனே உலகளவில் வைரல் ஹிட் ஆனது. அப்படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், அடுத்தடுத்து ஹிட் ஆல்பங்களை கொடுத்து 10 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக உருவெடுத்துள்ளார்.
Music director anirudh
அனிருத் தற்போது பீக் ஃபார்மில் உள்ளார். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, விஜய், அஜித், கமல் ஆகியோரின் படங்களை கைவசம் வைத்துள்ளார் அனி. இதுதவிர டோலிவுட், பாலிவுட்டில் இருந்தும் அனிருத்துக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் நிற்க கூட நேரமின்றி பம்பரம் போல் சுழன்று வருகிறார் அனிருத். அவர் இசையமைப்பில் தற்போது அஜித்தின் விடாமுயற்சி, விஜய்யின் லியோ, ரஜினியின் தலைவர் 170 மற்றும் 171, கமலின் இந்தியன் 2 ஆகிய படங்கள் தயாராகி வருகின்றன.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
anirudh songs
அனிருத் இந்த அளவுக்கு சக்சஸ்புல் இசையமைப்பாளராக வலம் வருவதற்கு காரணம், அவர் இசையமைத்த பெரும்பாலான பாடல்கள் வைரல் ஹிட் ஆனது தான். அனிருத்தின் பாடல்கள் பிடிக்காத ஆள் இருக்க முடியாது. அவரின் பேவரைட் பாடல்கள் என லிஸ்ட் எடுத்தால் அது நீண்டுகொண்டே செல்லும். இந்த நிலையில், சமீபத்திய நேர்காணல் ஒன்றில் இசையமைப்பாளர் அனிருத், தனக்கு பிடித்த மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்கள் பற்றி கூறி இருக்கிறார்.
anirudh favourite songs
அதன்படி, இளையராஜா இசையில் மூன்றாம் பிறை படத்தில் இடம்பெற்ற பூங்காற்று புதிதானது பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறிய அவர், ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்ததில் தனக்கு பேவரைட், ரோஜா படத்தில் இடம்பெற்ற புது வெள்ளை மழை பாடல் என கூறினார். அடுத்ததாக யுவன் இசையமைத்ததில் சர்வம் படத்தில் இடம்பெற்ற நீதானே பாடல் தனக்கு மிகவும் பிடிக்கும் என கூறினார். அதேபோல் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற ஓ சாந்தி... நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை ஆகிய பாடல்கள் பிடிக்கும் என தெரிவித்தார். இறுதியாக தர்புகா சிவா இசையமைத்த மறுவார்த்தை பேசாதே பாடலை கேட்டதும் சூப்பராக இருப்பது போல் உணர்ந்ததாக அனிருத் கூறினார்.
இதையும் படியுங்கள்...எம்ஜிஆர் - கலைஞர் மோதல்... ரஜினியிடம் கிடைத்த ரகசிய ஆடியோ டேப் - புயலை கிளப்பிய சூப்பர்ஸ்டார்