ஶ்ரீரங்கத்தில் இருந்து அயோத்திக்கு சீதனம் எடுத்து செல்லும் பிரதமர் மோடி - என்ன சீதனம்?
3 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் இன்று சிறப்பு பூஜைகள் நடத்துகிறார். இதற்காக சென்னையில் இருந்து பிரதமர் மோடி தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.
PM Modi Trichy Srirangam Visit
முற்பகல் 11 மணி முதல் 12.30 மணி வரை சாமி தாரிசனம் செய்தார். தெற்கு கோபுர வாசல் வழியாக கோயிலுக்குள் நுழைந்த பிரதமருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து கருடாழ்வார் மூலவர் தாயார் உள்ளிட்ட முக்கிய சன்னதிகளில் தரிசனம் செய்தார்.
PM Modi
இதனை தொடர்ந்து கோயில் யானை ஆண்டாளிடம் ஆசி பெற்றார். ஆண்டாள் யானை பிரதமருக்கு மவுத் ஆர்கன் வாசித்துக் காண்பித்தது. தொடர்ந்து கம்பர் மண்டபத்தில் அமர்ந்து ராமாயண பாராயணத்தைக் கேட்டார். பிரதமர் தமிழ் கலாச்சார உடையான வேஷ்டி சட்டையில் இருந்தார்.
Sri Ranganatha Swamy temple
பிரதமர் மோடிக்கு கோவில் சார்பில் பரிசு ஒன்று வழங்கப்பட்டது. அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு கொண்டு செல்ல ஸ்ரீ ரங்கநாத சுவாமி கோவிலில் உள்ள மூலஸ்தானத்தின் சார்பில் பிரதமருக்கு பரிசாக இது வழங்கப்பட்டது.
ராமர் படம் போட்ட புதிய 500 ரூபாய் நோட்டு - இணையத்தில் வைரல்.. உண்மையா? பொய்யா? முழு விபரம் இதோ!