Nayanthara: விக்னேஷ் சிவனுக்காக... மொட்டை மாடியில் நயன்தாரா பல லட்சம் செலவில் போட்ட பிளான்! வைரல் போட்டோஸ்!
நடிகை நயன்தாரா தன்னுடைய காதல் கணவர் விக்னேஷ் சிவனுக்காக, பல லட்சம் செலவு செய்து அலுவலகம் ஒன்றை கட்டிவருகிறார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழில் பிரபல நடிகர் சரத்குமாருக்கு ஜோடியாக 'ஐயா' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நயன்தாரா, தன்னுடைய இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்தார். இதை தொடர்ந்து மலையாளம், தெலுங்கு, தமிழ் என மூன்று மொழிகளும் தொடர்ந்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார்.
வாழ்க்கையில் பல ஏற்ற... இறக்கங்களை நயன்தாரா சந்தித்த போதிலும், அவை அனைத்தையும் எதிர்கொண்டு மீண்டும் தனக்கான இடத்தை பிடித்தார். இவரின் விடாமுயற்சியை தமிழ் திரையுலகில், நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டாராக மாற்றியது.
தன்னுடைய 40 வயதிலும், இளம் நடிகைகளை போல் யங் லுக்கில் வலம் வரும் நடிகை நயன்தாரா, தற்போது டெஸ்ட், மண்ணாங்கட்டி, போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். அதே போல் சில ஹிந்தி படங்களிலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது. நயன்தாராவின் மார்க்கெட் ஹிந்தியில் அதிகரிக்க காரணம், கடந்தாண்டு வெளியே வந்த 'ஜவான்' திரைப்படம் தான்.
இயக்குனர் அட்லீ, பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை வைத்து இயக்கி இருந்த, இந்த படத்தில் நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் முதல் பாலிவுட் படத்திலேயே நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய அதிர்ஷ்டமாகவே பார்க்கப்பட்டது. சுமார் 1200 கோடி வசூல் செய்தது மட்டும் இன்றி இந்த படத்திற்காக தாதா சாகிப் பால்கே விருதையும் வென்ற நடிகை நயன்தாரா.
திரையுலகில் நடிப்பு, தயாரிப்பு மற்றும் பல்வேறு பிசினஸில் பிஸியாக இருந்தாலும் கணவர் குடும்பம் குழந்தை என ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவியாகவும் இருந்து வருகிறார். படங்களில் கதைகளை கேட்பதற்காக கணவரும் - தானும் அடிக்கடி வெளியே செல்வதால் குழந்தைகளை பிரியும் சூழல் உள்ளதால், தற்போது தன்னுடைய வீட்டிலேயே புதிய அலுவலகம் ஒன்றை கட்டி வருகிறார்.
போயஸ் கார்டனில் உள்ள தன்னுடைய வீட்டில் தான் இந்த பிரம்மாண்ட அலுவலகத்தை அவர் கட்டி வருகிறார். தற்போது இது குறித்த போட்டோஸ் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.