காதலிக்காக கூலி வேலை.! காதல் கோட்டை படத்தை மிஞ்சிய கோலங்கள் சீரியல் நடிகர் அபிஷேக் சங்கரின் லவ் ஸ்டோரி!
நடிகர் அபிஷேக் ஷங்கர், பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும்... இவரை ரசிகர்கள் முன்பு மிகவும் பிரபலம் அடைய வைத்தது சீரியல்கள் தான். இந்நிலையில் இவருடைய ரியல் காதல் வாழ்க்கை பற்றி சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
1995 ஆம் ஆண்டு வெளியான 'மோகமுள்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் அபிஷேக் சங்கர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதாக ரீச் ஆகாத நிலையில், படவாய்ப்புக்காக சுமார் 5 வருடங்களுக்கு மேல் காத்திருந்தார் அபிஷேக்.
![article_image2](https://static-ai.asianetnews.com/images/01hgt8dsxxgfz3nhekv40afe8j/a2_300x168xt.jpg)
ஹீரோவாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில், 2001 ஆம் ஆண்டு அசோகவனம் எனும் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதைத்தொடர்ந்து பல்லவன், அம்முவாகிய நான், அழகான பொண்ணுதான், போன்ற படங்களில் அடுத்தடுத்து நடிக்க துவங்கினார்.
'காதல் கோட்டை' படத்தில் அஜித்துக்கு முன்பு இயக்குனர் அகத்தியன் இவரை தான் ஹீரோவாக வைத்து இயக்கி வந்தார். ஆனால் இப்படம் ஒரு சில காரணங்களால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் கதையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு, மீண்டும் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது. அதில் அஜித் ஹீரோவாக நடித்தார். மேலும் இந்த படம் இயக்குனர் அகத்தியனுக்கு தேசிய விருதை பெற்று தந்ததோடு சூப்பர்... டூப்பர்... ஹிட் அடித்தது.
மேலும் தொடர்ந்து சினிமாவில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வந்தாலும், அபிஷேக் சங்கர் சீரியலில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார். புஷ்பாஞ்சலி, ஆனந்த பவன், அலையோசை, குங்குமம், போன்ற பல சீரியல்களில் இவர் ஹீரோவாக நடித்திருந்தாலும், இவரை பட்டி தொட்டி எங்கும் பிரபலம் அடையச் செய்தது 2003 ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கோலங்கள் சீரியல் தான். இந்த தொடரில் தேவயானிக்கு ஜோடியாக அபிஷேக் நடித்திருந்தார்.
இந்த தொடர் முடிவடைந்து 18 வருடங்கள் ஆன பின்னர், மீண்டும் தேவயானிக்கு ஜோடியாக புதுப்புது அர்த்தங்கள் என்கிற சீரியலில் நடித்திருந்த அபிஷேக். தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மீனா என்கிற தொடரிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவர் சமீபத்தில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய காதல் மனைவி பத்மா குறித்த பேசி உள்ளார். இவருடைய மனைவி மிகவும் வசதியான குடும்பத்தை சேர்ந்தவராம். மும்பையில் வசித்து வந்த இவரிடம், வாரத்தில் ஒரு முறை தான் பேச முடியுமாம். பட வாய்ப்புகள் இல்லாத தன்னுடைய கஷ்டமான சூழ்நிலையில், மனைவியிடம் பேச வேண்டும் என்பதற்காக... கூலி வேலை செய்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
ஆங்கிலத்தில் இருந்து தமிழில் ட்ரான்ஸ்லேட் செய்து தர, இவருக்கு ரூ.50 சம்பளம் கொடுக்கப்பட்டது. இதில் 3 ரூபாய்க்கு தேவி தியேட்டரில் படம் பார்த்து விட்டு மீதம் இருக்கும் 47 ரூபாய் பணத்தை... தன் காதலியிடம் பேச செலவு செய்வாராம். இப்படியே தன்னுடைய மனைவி பத்மாவை... சுமார் 8 வருடங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார் அபிஷேக். இவர் மனைவி ஒரு வயலின் கலைஞர். கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.