MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • தப்பி தவறி கூட கடல்ல கால வச்சுடாதீங்க! இந்த 4 மாவட்டங்களில் சுனாமி போல் தாக்குமாம்! சென்னையில் நிலை என்ன?

தப்பி தவறி கூட கடல்ல கால வச்சுடாதீங்க! இந்த 4 மாவட்டங்களில் சுனாமி போல் தாக்குமாம்! சென்னையில் நிலை என்ன?

தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 கடலோர மாவட்டங்களுக்கு நாளை இரவு 11.30 மணிவரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுவிக்கப்பட்டுள்ளது. 

1 Min read
vinoth kumar
Published : Jun 12 2024, 12:03 PM IST| Updated : Jun 12 2024, 12:43 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kallakkadal Alert

Kallakkadal Alert

அமைதியாக காணப்படும் கடல் எந்தவித மாற்றங்களும் இன்றி திடீரென கொந்தளித்து கரையோரங்களில்  பாதிப்பை ஏற்படுத்தும் நிகழ்வு தான் கள்ளக்கடல் என்பார்கள். இதனை கேரள மக்கள் கள்ளக்கடல் நிகழ்வு என குறிப்பிடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் மற்றும் கேரளாவில் உள்ள சில கடல்களில் கடல் சீற்றத்திற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

24
High Waves Alert

High Waves Alert

இந்நிலையில், தமிழ்நாட்டில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 4 மாவட்டங்களுக்கு நாளை இரவு 11.30 மணி வரை கள்ளக்கடல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த 4 மாவட்டங்களில் கடற்கரையில் அலை அதிக உயரம் எழும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி 2.5 மீ, ராமநாதபுரம் 2.8 மீ, நெல்லை, தூத்துக்குடியில் 2.6 மீ உயரம் வரை கடல் அலை எழும்பக்கூடும் என இந்திய கடல்சார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

இதையும் படிங்க: Palani Temple Undiyal: பழனி முருகன் கோயிலில் 20 நாட்களில் நிரம்பிய உண்டியல்! குவிந்த கோடிகள்! கொட்டிய தங்கம்!

34
Thoothukudi Kallakkadal

Thoothukudi Kallakkadal

குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையும், ராமநாதபுரம் மாவட்டத்தில் ரோஜ்மா நகர் முதல் தீர்த்தாண்டதானம் வரையும், தூத்துக்குடியில் பெரியதலை முதல் வேம்பார் வரையும், நெல்லையில் குட்டப்புளி முதல் கூடுதலை வரையும் கடல் அதிக உயர எழும்ப வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க:  Omni Bus: ஜூன் 14ம் தேதி வரைக்கும் தான் டைம்! இந்த ஆம்னி பேருந்துகளுக்கு போக்குவரத்து துறை எச்சரிக்கை!

44
Chennai kallakkadal

Chennai kallakkadal

மேலும் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் கடலோர பகுதிகளில் லேசான அலை எழுச்சி இருக்கும். சென்னையில் பாலவாக்கம் முதல் லட்சுமிபுரம் ஓடைக்குப்பம் வரையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலம்பரைக்குப்பம் முதல் சின்ன நீலாங்கரை வரையும், திருவள்ளூரில் பழவேற்காடு முதல் ராயபுரம் வரை லேசான அலை எழுச்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இன்று 1 மணி வரையும், திருவள்ளூரில் நாளை இரவு 7 மணி வரையும் இந்த கடல் எழுச்சி இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சென்னை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved