நயன்தாராவிற்கு அடுத்தடுத்து வந்த சோதனை...கோவில் கோவிலாக போக இதுதான் காரணம்? கடும் அப்செட்டில் விக்னேஷ் சிவன்..
Nayanthara-Vignesh Shivan: நடிகை நயன்தாராவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதால், மீண்டும் ஒரு முறை விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் தாலி கட்ட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Vignesh Shivan - Nayanthara
கடந்த 7 வருட காதலுக்கு பிறகு நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம் மகாபலிபுரத்தில் கடந்த ஜுன் 9ம் தேதி கோலாகலமாக நடந்து முடிந்தது. இதில் ஷாருக்கான், ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி என கோலிவுட் முதல் பாலிவுட் வரை ஏராளமான திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Vignesh Shivan - Nayanthara
திருமணத்திற்கு அடுத்த நாள் இருவரும் திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்ய ஒரு சர்ச்சையில் சிக்கினார்கள், அதற்கு விக்னேஷ் சிவன் தற்போது மன்னிப்பும் கேட்டு விட்டார். இருப்பினும், கோவில் நிர்வாகம் தரப்பில் நயன்தாராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலானது.
Vignesh Shivan - Nayanthara
இதையடுத்து, நயன்தாராவின் வீடான கொச்சிக்கு மறு வீட்டிற்கு சென்றனர். அங்கு பெற்றோர்களிடம் அவர்கள் ஆசி பெற்றனர். இன்னும், இரண்டு வாரங்கள் வரை அவர்கள் நயன்தாராவின் பெற்றோருடன் கொச்சியில் தங்கி இருக்க போகிறார்களாம். இதையடுத்து, கொச்சியில் உள்ள திருவுல்லாவில் உள்ள கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
Vignesh Shivan - Nayanthara
இதையடுத்து, நயன்தாரா திருமணம் நடந்த போது பொது இடமான மாமல்லபுரம் கடற்கைரையில் பொதுமக்கள் ஏன் அனுமதிக்கப்படவில்லை என்று சமூக ஆர்வலர் சரவணன் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது.
nayanthara vignesh shivan wedding
திருமணத்திற்கு முன்னரும், திருமணம் முடிந்த பின்னரும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி கோவில், கோவிலாக சென்று இறைவனை வழிபட்டு வருகின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்த நிலையில், நடிகை நயன்தாராவிற்கு மாங்கல்ய தோஷம் மற்றும் செவ்வாய் தோஷம் இருப்பதாகவும் இதனால் தான் அவர் கோவில் கோவிலாக சுற்றி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால், விக்னேஷ் சிவன் நயன்தாரா கழுத்தில் மீண்டும் ஒருமுறை தாலி கட்டுவார் என்று கூறப்படுகிறது.