அடித்தாரா பாலா? வணங்கானில் இருந்து சூர்யா விலகியதன் உண்மை பின்னணியை போட்டுடைத்த தயாரிப்பாளர்
வணங்கான் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குனர் பாலா நடிகர் சூர்யாவை அடித்ததால் அவர் அப்படத்தில் இருந்து விலகியதாக கூறப்பட்ட நிலையில், அதுபற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்துள்ளார்.
suriya, Bala
நடிகர் சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய இயக்குனர்களில் முக்கியமானவர் பாலா. அவர் இயக்கிய நந்தா மற்றும் பிதாமகன் ஆகிய படங்களில் நடித்த பின்னர் தான் சூர்யாவின் இமேஜே மாறியது. நடிக்கவே வரவில்லை என்று விமர்சித்தவர்கள் மத்தியில் சூர்யாவுக்குள் இருக்கும் நடிப்புத் திறமையை வெளிக்கொண்டு வந்த பெருமை இயக்குனர் பாலாவையே சேரும். இதனால் அவர்மீது அளவு கடந்த மரியாதை வைத்துள்ளார் சூர்யா.
vanangaan suriya
பிதாமகன் படத்துக்கு பின்னர் சூர்யாவும், பாலாவும் ஒரு படத்தில் கூட இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்தனர். அந்த காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வணங்கான் என்கிற படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற உள்ளதாக அறிவித்தனர். அப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க, அதில் சூர்யா ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்தார். அப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் கடந்த 2022-ம் ஆண்டு தொடங்கி சுமார் ஒரு மாதம் நடைபெற்றது.
இதையும் படியுங்கள்... பாப் கட்டிங் ஹேர் ஸ்டைல்.! கோட் சூட்டில்.. ஸ்டைலிஷ் நாயகியாக கலக்கிய ஜோதிகாவின் போட்டோஸ்!
vanangaan Arun vijay
இதையடுத்து சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும், அப்போது பாலா அடித்ததால் திடீரென படப்பிடிப்பை நிறுத்திவிட்டு நடிகர் சூர்யா சென்னை திரும்பியதாக கூறப்பட்டது. அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு அதன் பின் தொடங்கப்படவே இல்லை. இறுதியாக சூர்யா அப்படத்தில் இருந்து விலகிவிட்டதாக அறிக்கை வெளியானது. இதையடுத்து அருண் விஜய்யை வைத்து வணங்கான் படத்தை எடுத்து வருகிறார் இயக்குனர் பாலா. இப்படத்தை சுரேஷ் காமாட்சியும் பாலாவும் இணைந்து தயாரிக்கின்றனர்.
Suresh Kamatchi
இந்நிலையில், சூர்யா வணங்கான் படத்தில் இருந்து விலகியதன் பின்னணி குறித்து சமீபத்திய பேட்டியில் பேசி உள்ளார் சுரேஷ் காமாட்சி. அதில் அவரிடம் சூர்யாவை பாலா அடித்தது உண்மை தானா என கேள்வி முன்வைக்கப்பட்டது. இதனை திட்டவட்டமாக மறுத்த அவர், அடித்திருக்க வாய்ப்பே இல்லை, ஓட விட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. ஏனெனில் அருண் விஜய்யையும் பாலா சார் ஓட விட்டதை நான் பார்த்தேன்.
அதுதவிர சூர்யா மீது பாலாவும், பாலா மீது சூர்யாவும் அளவு கடந்த மரியாதை வைத்திருக்கிறார்கள். சினிமாவில் சூர்யா தற்போது இருக்கும் உயரம் வேறு, அதற்கு வணங்கான் கதை ஏற்றதாக இல்லை. அதற்காக பாலா கதையை மாற்ற முடியாது என்பதால், இருவரும் பேசி தான் அந்த முடிவை எடுத்துள்ளார்கள். அவர்களுக்குள் சண்டையெல்லாம் எதுவுமில்லை என சுரேஷ் காமாட்சி கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... Codeyil Iruvar: ஸ்டார்ட் அப் துறை பின்னணியில்.. கோபி - சுதாகர் கலக்கும் கோடியில் இருவர்! வெளியானது ட்ரைலர்!