பவதாரிணி மறைவுக்கு பின் இளையராஜாவிடம் ஏற்பட்ட மாற்றம்! நேற்று தந்தை... இன்று மகன்..! வைரலாகும் புகைப்படம்!
இளையராஜா தன்னுடைய மகன் யுவான்ஷாங்கர் ராஜாவுக்கு உணவு ஊட்டிவிட்டு பாச மழை பொழியும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தன்னுடைய ஈடு இணையற்ற இசையால் லட்ச கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் இளையராஜா. 1000-திற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள இவர், 5 தேசிய விருது உட்பட பத்ம பூஷன், பத்மவிபூஷன், கலைமாமணி போன்ற ஏகப்பட்ட விருதுகளை வாங்கியுள்ளார்.
இவர் இசை துறையில் யாராலும் எட்டமுடியாத இடத்தை பிடித்திருந்தாலும்... குடும்பம், பாசம் என வந்தால் பெரும்பாலும் தனிமையில் இருப்பதையே விரும்புவார். யுவன் மதம் மாறி திருமணம் செய்து கொண்டதால், பல வருடங்கள் அவரிடம் பேசாமல் இருந்த இளையராஜா தன்னுடைய பேத்தி பிறந்த பிறகே யுவன் ஷங்கர் ராஜாவை ஏற்று கொண்டார்.
Ilayaraja
அதே போல் கார்த்திக் ராஜாவின் திறமைகளை இளையராஜா என்றுமே மதித்து இல்லை என்கிற ஒரு பேச்சும் உண்டு. அதே போல் பாவதாரணியிடமும் சில மாதங்கள் பேசாமல் இருந்தார் இளையராஜா என அவர் இறந்த சமயத்தில் செய்திகள் பரவின.
ஆனால் பாவதாரணியின் மறைவு, இளையராஜாவை ஒட்டு மொத்தமாக மாற்றி விட்டதா? என்கிற கேள்வி ஒன்றை ரசிகர்கள் எழுப்பி வருகிறார்கள். காரணம் இளையராஜா வெளிநாடுகளில் கச்சேரி இருந்தால் மட்டுமே செல்வார் என்பது அனைவரும் அறிந்ததே.
தன்னுடைய கச்சேரி முடிந்த அடுத்த நாளே இந்தியாவுக்கு வந்து தன்னுடைய ஸ்டூடியோவில் வழக்கமான பணிகளை செய்ய தொடங்கி விடுவார். ஆனால் இந்த முறை கோடை விடுமுறையை கழிக்க மகன் யுவன் ஷங்கர் ராஜா குடும்பத்துடன் மொரீஷியஸ் சென்றுள்ளார், இளையராஜா.
ஏற்கனவே இவர் கடல் அழகை ரசிக்கும் புகைப்படம் ஒன்று வைரலான நிலையில்... இதை தொடர்ந்து நேற்று, யுவன் ஷங்கர் ராஜாவுக்கு, இளையராஜா உணவு ஊட்டிவிடும் புகைப்படம் வெளியானது. இதை தொடர்ந்து அப்பா இளையராஜவுக்கு மகன் உணவு ஊட்டிவிடும் புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.