MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • உங்கள் குழந்தையை நேர்மையான, புத்திசாலித்தனமான நபராக எப்படி வளர்ப்பது? பெற்றோர்கள் ப்ளீஸ் நோட்..

உங்கள் குழந்தையை நேர்மையான, புத்திசாலித்தனமான நபராக எப்படி வளர்ப்பது? பெற்றோர்கள் ப்ளீஸ் நோட்..

நேர்மையான மற்றும் புத்திசாலித்தனமான குழந்தையை வளர்ப்பதற்கான சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Ramya s
Published : Feb 29 2024, 05:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

குழந்தைகள் நாட்டின் எதிர்காலம். அவர்களில் சிலர் கொள்கைகளை உருவாக்குகிறார்கள், வேறு சிலர் நாம் வசிக்கும் வீடுகள் மற்றும் வேலை செய்யும் இடங்களை வடிவமைக்கிறார்கள். எனவே குழந்தைகள் நேர்மையான சூழலில் வளர்வதை உறுதிப்படுத்துவது முக்கியம். அதே நேரம் புத்திசாலித்தனம் வாழ்க்கையின் சிக்கல்களை வழிநடத்தும் கருவிகளுடன் அவர்களைச் சித்தப்படுத்துகிறது. எனவே, நேர்மையான மற்றும் புத்திசாலித்தனமான குழந்தையை வளர்ப்பதற்கான சில டிப்ஸ் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

28

குழந்தைகள் தங்கள் பெற்றோரையும் அவர்களின் நடத்தையையும் பார்த்து தான் அதிகமாக கற்றுக்கொள்கின்றனர். அதாவது பெற்றோரின் செயல்களும் வார்த்தைகளும் நீண்ட காலமாக உங்கள் குழந்தைக்கு சரி மற்றும் தவறுகளை வரையறுக்கின்றன. சரியான விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு பெற்றோர் தான் பொறுப்பானவர்கள். எனவே, உங்கள் சொந்த செயல்களிலும் தொடர்புகளிலும் அவர்களுக்கு நேர்மையைக் காட்டுவது முக்கியம். உங்கள் எண்ணங்கள், முடிவுகள் மற்றும் உணர்ச்சிகளில் வெளிப்படையாக இருங்கள். நீங்கள் செய்யும் தவறுகளை ஒப்புக்கொள்ளவும், அவற்றுக்கு பொறுப்பேற்கவும் கற்றுக்கொள்ளுங்கள். நேர்மையின் முன்மாதிரியாக இருப்பதன் மூலம், உங்கள் பிள்ளை அதைப் பின்பற்றுவதற்கு வலுவான அடித்தளம் அமைக்கப்படும்.

38

உங்கள் குழந்தைகள் புதிய தலைப்புகளை கேள்வி கேட்கவும் ஆராய்வதையும் ஊக்குவிக்கும் சூழலை உருவாக்குவது முக்கியம். உங்கள் பிள்ளை ஒவ்வொரு நாளும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கும்போது, கேள்விகளைத் தவிர்க்காமல் இருப்பது மிகவும் முக்கியம். அனுபவங்கள், புத்தகங்கள், விவாதங்கள் மற்றும் பல்வேறு பாடங்களைப் பார்ப்பதன் மூலம் கற்கும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அவர்களின் ஆர்வத்தை அதிகரிக்கவும். பகுத்தறிவு மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன்களைத் தூண்டும் கேள்விகளைக் கேட்பதன் மூலம் விமர்சன ரீதியாக சிந்திக்க குழந்தைகளை ஊக்குவிக்கவும். இது அவர்களின் மனதை சுதந்திரமாகவும் தர்க்கரீதியாகவும் சிந்திக்க சவால் செய்வதன் மூலம் அறிவார்ந்த பகுத்தறிவு திறன்களை வளர்க்க உதவும்.

48

குழந்தைகள் வளர்ந்த பின்பும், அவர்களை இன்னும் குழந்தைகள் என்று நீங்கள் நினைத்தாலும், தார்மீக சவாலான சூழ்நிலைகளில் இருந்து எப்படி வெளியேறுவது என்பதை அவர்களுக்குக் கற்பிப்பது முக்கியம். சிறு வயதிலிருந்தே நெறிமுறை தேர்வுகள் பற்றிய விவாதங்களில் அவர்களை ஈடுபடுத்துங்கள். குழந்தைகள் செய்யும் செயல்களின் விளைவுகளைப் பற்றி சிந்திக்க அவர்களை ஊக்குவிக்கவும் இது பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் கோபத்தில் தங்கள் டேப்லெட்டை தூக்கி எறிந்தால் என்ன நடக்கும் என்று பொறுமையாக புரிய வையுங்கள். பச்சாதாபம், நேர்மை மற்றும் நல்ல செயல்களின் அடிப்படையில் முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள். இந்த அணுகுமுறை அவர்களின் முடிவெடுக்கும் செயல்பாட்டில் ஒருமைப்பாடு மற்றும் நேர்மையின் வலுவான உணர்வை வளர்க்க உதவுகிறது.

58

குழந்தைகள் ஏதேனும் தவறு செய்தாலோ அல்லது தவறாகப் பேசியதற்காக அவர்களை தண்டிக்க கூடாது. அதற்கு பதிலாக, ஏதாவது தவறு செய்தால், நீங்கள் உட்கார்ந்து, எப்படி, என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, உங்கள் குழந்தை தீர்ப்புக்கு பயப்படாமல் தங்களை வெளிப்படுத்த பாதுகாப்பாக உணரும் சூழலை உருவாக்குங்கள்.

 

68

அவர்களின் எண்ணங்கள், கவலைகள் அல்லது பிரச்சனைகள் குறித்து குழந்தையிடம் வெளிப்படையாக பேசுங்கள். அவர்களின் உணர்வுகள் மற்றும் கருத்துக்கள் உங்களின் உணர்வுகளிலிருந்து வேறுபட்டாலும் சரி பொறுமையாக அவர்கள் சொல்வதை கேளுங்கள்.. இது நம்பிக்கையை வளர்க்கவும் நேர்மையை ஊக்குவிக்கவும் உதவும், மேலும் அவர்கள் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் வழிகாட்டுதலைத் தேடுவதற்கும் உதவும்.

78

குழந்தைகளுக்கு தங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்களிடம் இருந்து கற்றுக்கொளின்றனர். உண்மையாகவும், நம்பகமானதாகவும், கொள்கையுடனும் இருப்பதன் முக்கியத்துவத்தை அவர்களுக்கு எடுத்துக்கூறுங்கள். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை உறவுகளில் நம்பிக்கையின் அடித்தளத்தை நேர்மை எவ்வாறு உருவாக்குகிறது என்பதை அவர்களுக்கு புரியவையுங்கள்.

88

சவால்கள் அல்லது சகாக்களின் அழுத்தத்தை எதிர்கொள்ளும் போது கூட உங்கள் பிள்ளை அவர்களின் மதிப்புகள் மற்றும் கொள்கைகளை நிலைநிறுத்த ஊக்குவிக்கவும், இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் நேர்மையான மற்றும் புத்திசாலித்தனமான பெரியவர்களாக வளருவார்கள்.

About the Author

RS
Ramya s
விஷுவல் கம்யூனிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றுள்ள இவர் 2011 முதல் செய்தி ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். பல முன்னணி செய்தி சேனல்கள் மற்றும் டிஜிட்டல் செய்தி தளங்களில் பணியாற்றிய அனுபவம் இவருக்கு உள்ளது. தற்போது ஏசியா நெட் தமிழ் செய்தி இணையதளத்தில் மூத்த துணை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். லைஃப்ஸ்டைல், வணிகம், வேலைவாய்ப்பு, சினிமா ஆகிய தலைப்புகளில் மிகுந்த ஆர்வம் இருக்கும் இவர் வாசகர்களை ஈர்க்கும் வகையில் செய்திகளை எழுதி வருகிறார்.
பெற்றோர் ஆலோசனை
Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved