Health Tips : உஷார்..! கோடை காலத்தில் 'இந்த' பானங்களை தவறுதலாக கூட குடிக்காதீர்கள்.. ஆரோக்கியத்திற்கு கேடு!
உடல் ஆரோக்கியமாக இருக்க கோடையில் குடிக்க கூடாத பானங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
கோடை காலம் நடந்துகொண்டிருப்பதால், நம் உடலை அதிக நீரேற்றத்துடன வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஏனெனில், அதிகப்படியான வெப்பத்தின் காரணமாக நம்முடைய உடலில் வெப்ப நிலை அதிகரிக்கும். இதனால் நம் உடலில் இருக்கும் நீர் உறிஞ்சப்படும்.
ஆகையால், இந்த காலகட்டத்தில் ஜூஸ் வகைகளை அதிகமாக எடுத்துக் கொள்ளவது வழக்கம். ஆனால், நாம் தேர்ந்தெடுக்கும் சில பானங்களால் நமக்கு சில பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. குறிப்பாக, அதிக நீரிழப்பு ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே, இந்த கோடையில் குடிக்க கூடாத பானங்களை பற்றி இங்கு பார்க்கலாம்.
சோடா: கோடை காலத்தில் தாகத்தைத் தணிக்க சோடாவை உட்கொள்பவர்கள் பலர் உள்ளனர், ஆனால் இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். சோடா நீரில் கார்பன் மற்றும் பாஸ்பாரிக் அமிலம் அதிகம் உள்ளது. இது இதயம் மற்றும் சிறுநீரக நோய்களை ஏற்படுத்தும். இதனை தினமும் குடித்து வந்தால், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனைகள் வரலாம். பற்கள் மற்றும் ஈறுகள் தொடர்பான பிரச்சனைகளும் இருக்கலாம்.
காபி: கோடை காலத்தில் அதிகமாக காபி குடித்தால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும். உண்மையில், இதில் உள்ள காஃபின் உடலில் நீரிழப்பு ஏற்படுகிறது. ஒருவேளை, உங்களால் குடிக்காமல் இருக்க முடியவில்லை என்றால், ஒன்று அல்லது இரண்டு கப் காபிக்கு மேல் குடிக்காதீர்கள்.
இதையும் படிங்க: Summer health tips: வெயில் காலத்தில் வரும் சரும நோய்களுக்கு முற்றுப்புள்ளி! இந்த 4 விஷயங்களை கட்டாயம் பண்ணுங்க
டீ: கோடைக்காலத்தில் டீ குடிப்பதையும் தவிர்க்க வேண்டும். இதுவும் உங்கள் உடலுக்கு நல்லதல்ல. இதில் காஃபின் உள்ளது, இது உங்கள் உடலை நீரிழப்பு செய்யும். இது தவிர, டீ குடிப்பதால் சிறுநீர் அதிகமாக வெளியேறுவதுடன், கோடைக்காலத்தில் அதிகமாக டீ குடிப்பதும் உங்கள் உடலை நீரிழப்புக்கு ஆளாக்கும். உண்மையில் தேயிலை சாயம் ஒரு டையூரிடிக் போல் செயல்படுகிறது. இதன் காரணமாக, உங்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை உள்ளது மற்றும் உங்கள் உடலில் நீர் இழப்பு ஏற்படலாம்.
இதையும் படிங்க: Summer Drink : கோடையில் குளூ குளூ.. உடனே நுங்கு ஜூஸ் செய்து குடிங்க.. ரெடிபி இதோ!!
மில்க் ஷேக்குகள்: கோடையில் பால் சார்ந்த பானங்கள் எப்போதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இவற்றை உட்கொள்வதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
மதுபானம்: மதுவினால் பல பக்கவிளைவுகள் இருந்தாலும் கோடைக்காலத்தில் மக்கள் பீர் அதிகமாக அருந்துவார்கள். கோடைக்காலத்தில் மது அருந்துவதால் நீர்ச்சத்து குறைபாடு, தலைவலி, வாய் வறட்சி போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். கூடுதலாக, ஆல்கஹால் உட்கொள்வது உடலை வெப்பமாக்குகிறது மற்றும் வியர்வை அதிகரிக்கும். வியர்வை காரணமாக நீரிழப்பு செயல்முறை வேகமாகிறது.