Sani Peyarchi 2022: இன்று சனியின் வக்ர பெயர்ச்சி...வரும் 2023 வரை மகிழ்ச்சி கடலில் தத்தளிக்கும் ராசிகள்..
Sani Peyarchi 2022 Palangal: சனி பெயர்ச்சி 2022..நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியதாக இருக்கும் சனி பகவான், 29 ஏப்ரல் 2022 அதாவது இன்று மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாக உள்ளார். ஒவ்வொரு ராசிக்கும் 2022ல் நடக்கும் சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சி காரணமாக, எந்த ராசிகெல்லாம் என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
sani peyarchi 2022
சனி வக்ர பெயர்ச்சி 2022
நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியதாக இருக்கும் சனி பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டரை ஆண்டுகள் தங்கி அதற்கு ஏற்றார் போல் நற்பலன்கள் மற்றும் கேடு பலன்களை தருபவர்.இந்த கிரகத்தில் சிறு மாற்றம் ஏற்பட்டாலும், அது மனித வாழ்க்கையை நேரடியாக பாதிக்கும்.
2022ல் சனிப் பெயர்ச்சி இல்லை என்றாலும், அவரின் நீண்ட அதிசார மற்றும் வக்ர பெயர்ச்சி மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் பல வித மாற்றங்களை ஏற்படுத்தும். அதன்படி, மோசமான பலன்களை அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் நற்பலனும், நற்பலன் அனுபவிக்கும் சில ராசிகளுக்கு கெடுபலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. அதன்படி, 29 ஏப்ரல் 2022 அதாவது இன்று சனி பகவான் மகரத்திலிருந்து, கும்ப ராசிக்கு அதிசாரமாக பெயர்ச்சியாக உள்ளார். அதற்கு அடுத்தபடியாக, ஜூன் 5 ஆம் தேதி கும்ப ராசியில், சனி பகவான் வக்ர பெயர்ச்சியாகியுள்ளார். ஒவ்வொரு ராசிக்கும் 2022ல் நடக்கும் சனி பகவானின் அதிசார, வக்ர பெயர்ச்சி காரணமாக, எந்த ராசிகெல்லாம் என்னென்னெ பலன்கள் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
sani peyarchi 2022
சிம்மம்:
சிம்ம ராசிக்கு கண்டக சனி பலன் ஏற்படும். இந்த நேரத்தில் உங்கள் வேலையில் தடைகள் ஏற்படலாம். ஆனால் கடின உழைப்பால் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். அதே நேரத்தில், மாணவர்கள் கல்வியில் சிறந்த அனுபவத்தை பெறுவார்கள். இந்த நேரத்தில், உங்கள் வருமானம் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வேலையில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
sani peyarchi 2022
கடகம்:
அதோடு கடக ராசிக்கு அஷ்டம சனி பலன் உண்டாகும். இதனால், தொழிலில் நஷ்டம் ஏற்படலாம். ஆரோக்கியத்தில்அக்கறை கொள்ளுங்கள்கடகம் ராசிக்காரர்கள் இந்த காலத்தில் நிதி நிலையில் எச்சரிக்கை அவசியம். திடீர் செலவுகள் வரக்கூடும். வெளிநாடு செல்வதில் பிரச்சனைகள் வரலாம். பண வரவை விட செலவுகள் மிக அதிகமாக இருக்கும்.மனதில் பதற்றம், அமைதியின்மை போன்றவையும் ஏற்படலாம்.
கும்பத்திற்கு செல்வதால் தனுசு ராசி ஏழரை சனியிலிருந்து விடுபடுவதோடு, மிதுனம் மற்றும் துலாம் ராசியினர் சனி கெடுபலனிலிருந்து நிவாரணம் பெற்று பல நன்மைகளை அடைவார்கள். இந்த பலன் 2023ல் நடக்க உள்ள சனிப் பெயர்ச்சி காலம் வரை பொருந்தும்.
sani peyarchi 2022
மீனம்:
கும்ப ராசிக்கு அதிசாரமாக செல்வதால் மீன ராசிக்கு ஏழரை சனி தொடங்கும். எனவே, இந்த காலத்தில் மீனம் ராசிக்காரர்கள் கடன் வாங்குவதை, கொடுப்பதை தவிர்க்க வேண்டும். இந்த நேரத்தில், செலவுகள் அதிகரிக்கலாம். இது முதலீடு செய்வதற்கு உகந்த நேரம் அல்ல. சிறிய கவனக்குறைவு ஏற்பட்டாலும், இழப்புகள் ஏற்படலாம். ஆகையால், நிதி தொடர்பான அனைத்து விஷயங்களிலும் அதிகபட்ச கவம் தேவைப்படுகின்றது. அதேபோன்று.ஆரோக்கியத்தில் அக்கறை அவசியம். தொலை தூர பயணங்களை தவிர்க்கவும்.