இனி அந்த மாதிரி சப்ஜெக்ட்டுக்கு "நோ" தான்.. பளிச்சென்று சொன்ன நந்திதா - அடுத்து அவர் மூவ் என்ன தெரியுமா?
Actress Nandita Swetha : பிரபல நடிகை நந்திதா ஸ்வேதா கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான பா. ரஞ்சித் அவர்களின் "அட்டக்கத்தி" திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் நடிகையாக களமிறங்கினார்.
Actress Nandita
பெங்களூருவில் பிறந்த நடிகை நந்திதா, துவக்கத்தில் தொகுப்பாளியாக தனது கலை வாழ்க்கையை துவங்கிய நிலையில், கன்னட மொழி படங்களில் நடிக்க துவங்கினார். அதன் பிறகு தமிழில் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளியான "அட்டகத்தி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் புகழ்பெற்றார்.
சரியான நேரத்தில்.. தளபதியின் தரமான வீடியோவை வெளியிட்டு மாஸ் சம்பவம் செய்த பிக்பாஸ் சரவணன் விக்ரம்!
Nandita swetha
கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் பயணித்து வரும் நந்திதா ஸ்வேதா அவர்களுக்கு தமிழ் மொழியிலும் தெலுங்கு மொழியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இருப்பினும் இவர் தொடர்ச்சியாக ஹாரர் திரைப்படங்களில் மட்டுமே நடிக்க கமிட்டாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இறுதியாக தமிழில் இவர் நடிப்பில் வெளியான திரைப்படம் "ரத்தம்".
Actress Nandita swetha
இந்நிலையில் அண்மையில் ஒரு பேட்டியில் பேசியுள்ள நடிகை நந்திதா ஸ்வேதா, தான் விரைவில் ஒரு வெப் சீரிஸில் நடிக்க உள்ளதாகவும், இனி ஹாரர் திரைப்படங்களை தேர்வு செய்யப் போவதில்லை என்றும் கூறியுள்ளார். தன்னிடம் கதை சொல்லும் இயக்குனர்களும் தொடர்ச்சியாக Horror பட கதைகளையே சொல்லி வருவதால் அதிலிருந்து சற்று வெளியேறி ஜனரஞ்சகமாக கதாபாத்திரங்களில் நடிக்க ஆசைப்படுவதாக அவர் கூறியுள்ளார்.